Amar Prasad Reddy: ’பெண் நிர்வாகி மண்டை உடைப்பு’ தலைமைவறைவான அமர்பிரசாத் ரெட்டியை பிடிக்க தனிப்படை அமைப்பு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Amar Prasad Reddy: ’பெண் நிர்வாகி மண்டை உடைப்பு’ தலைமைவறைவான அமர்பிரசாத் ரெட்டியை பிடிக்க தனிப்படை அமைப்பு!

Amar Prasad Reddy: ’பெண் நிர்வாகி மண்டை உடைப்பு’ தலைமைவறைவான அமர்பிரசாத் ரெட்டியை பிடிக்க தனிப்படை அமைப்பு!

Kathiravan V HT Tamil
Published Jan 31, 2024 11:48 AM IST

“ஆனால் அமர்பிரசாத் ரெட்டி தலைமறைவாக உள்ள நிலையில் ஏற்கெனவே அவரை பிடிக்க ஒரு தனிப்படை போலீசார் ஆந்திரா சென்றுள்ளது. இந்த நிலையில், தற்போது குஜராத், டெல்லி மும்பைக்கு மூன்று தனிப்படை போலீசார் விரைதுள்ளது”

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உடன் அமர்பிரசாத் ரெட்டி
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உடன் அமர்பிரசாத் ரெட்டி

பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு அதிகம் ஊடகங்களில் தென்பட தொடங்கியவர் அமர்பிரசாத் ரெட்டி. திமுக அரசுக்கு எதிராக யூடியூப் சேனல்களில் வெளியாகும் அவரது அனல் பறக்கும் பேட்டிகள் பேசு பொருளாகின.

’முடிந்தால் என்னை தொட்டுப்பார்! என்னை தொட்டால் என்ன நடக்கும் தெரியுமா?’ என்பது போன்ற வீர வசனங்களை எல்லாம் பேசி அசத்திய அமர்பிரசாத் ரெட்டி பாஜக கொடி கம்பம் நட முயன்ற போது அரசு சொத்தை சேதப்படுத்திய வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைதாகி பின்னர் ஜாமீன் பெற்று விடுதலை ஆனார். 

இந்த நிலையில், கடந்த ஜனவரி 19ஆம் தேதி  நடைபெற்ற கேலோ இந்தியா 2023 நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சென்னை வந்திருந்தார். அப்போது,  அந்த நிகழ்ச்சிக்கு ஆட்களை கூட்டி வருவது தொடர்பாகவும், பணம் கொடுப்பது தொடர்பாகவும் ஏற்பட பிரச்னையில் கோட்டூர்புரத்தை சேர்ந்த பாஜக நிர்வாகியான பேபி என்ற பெண் மீது தாக்குதல் நடத்தியதாக அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கில் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அமர்பிரசாத் ரெட்டியின் கார் ஓட்டுநர் ஸ்ரீதர் கைது செய்யப்பட்டுள்ளார். 

ஆனால் அமர்பிரசாத் ரெட்டி தலைமறைவாக உள்ள நிலையில் ஏற்கெனவே அவரை பிடிக்க ஒரு தனிப்படை போலீசார் ஆந்திரா சென்றுள்ளது. இந்த நிலையில், தற்போது குஜராத், டெல்லி மும்பைக்கு மூன்று தனிப்படை போலீசார் விரைதுள்ளது.