Savukku Shankar : செந்தில் பாலாஜிக்கு ஸ்பெஷல் கவனிப்பு : காவலர்கள் பெயரை வெளிட்ட சவுக்கு சங்கர்!
காவலர்கள் இருவர் சீருடையின்றி காலை 7.30 மணிக்கு மருத்துவமனை சென்று கைதி செந்தில் பாலாஜியை சந்தித்து பேசி அவருக்கு தேவையானவைகளை செய்துள்ளனர் என சவுக்கு சங்கர் ட்வீட் செய்துள்ளார்.

செந்தில் பாலாஜிக்கு சிறையில் ஸ்பெஷல் கவனிப்பு எனவும், இரு காவலர்கள் அவரை சந்தித்து பேசி தேவையானவைகளை செய்துள்ளனர் என தனது டிவிட்டர் பக்கத்தில் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையின் பலகட்ட விசாரணைக்கு பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி ஜூன் 14-ல் கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கையின் போது நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரர் மருத்துவமனையில் முதலில் அனுமதிக்கப்பட்டு பின்னர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி சமீபத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் மத்திய சிறை மருத்துவமனையில் தங்க வைக்கப்பட்டு, மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.
இந்நிலையில், புழல் சிறையில் மருத்துவர்கள் ஓய்வெடுக்கும் அறையை அபகரித்து தனக்கு ஏற்றார் போல் செந்தில் பாலாஜி மாற்றிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து அரசியல் விமர்சகரும், பிரபல யூட்டியூபருமான சவுக்கு சங்கர் ட்வீட் செய்துள்ளார்.
அதில், “இன்னும் சிறையில் மருத்துவர்கள் அறையில் அண்ணன் செந்தில் பாலாஜி தங்க வைக்கப் பட்டுள்ளார். பிரகாஷ்,மோகன் என்ற இரு ரேஷன் ஸ்டோர் காவலர்கள் சிறப்பாக தயாரித்த உணவை வினியோகம் செய்தனர். இன்றும் முருகேசன் டி.ஐ.ஜி. கிருஷ்ணராஜ் கண்காணிப்பாளர் இருவரும் சீருடையின்றி காலை 7.30 மணிக்கு மருத்துவமனை சென்று கைதி செந்தில் பாலாஜியை சந்தித்து பேசி அவருக்கு தேவையானவைகளை செய்துள்ளனர்.” என விமர்சித்துள்ளார்.
முன்னதாக புழல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியை சிறைத்துறை டிஐஜி விதிகளை மீறி அடிக்கடி சந்தித்து வருவதாக சமூகவலைத்தளங்களில் தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பி இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சிறைத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், சிறையில் கைதிகளாக இருப்பவர்களை சிறையில் சிறைக்கண்காணிப்பாளர் மற்றும் டிஐஜி ஆகியோர் திடீரென சோதனை செய்யலாம்.
மேலும் சிறை கைதிகளை விசாரணை நடத்தவும் விதிகளும் வழிமுறைகளும் உள்ளன. அதன்படி, அமைச்சர் செந்தில் பாலாஜியை சிறைத்துறை டிஐஜி ஒருமுறை மட்டுமே விதிமுறைகளுக்கு உட்பட்டு சந்தித்துள்ளார். காலை மற்றும் மாலை நடை பயிற்சி மேற்கொள்ளும் போது டிஐஜி கைதிகளை சந்திப்பது வழக்கம் எனவும் சிறைத்துறை விளக்கம் அளித்துள்ளது
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்