‘வசைபாடுவது இருக்கட்டும்.. பதில் வேணும்..’ புள்ளி விபரத்துடன் எஸ்.பி.வேலுமணி கேள்வி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘வசைபாடுவது இருக்கட்டும்.. பதில் வேணும்..’ புள்ளி விபரத்துடன் எஸ்.பி.வேலுமணி கேள்வி!

‘வசைபாடுவது இருக்கட்டும்.. பதில் வேணும்..’ புள்ளி விபரத்துடன் எஸ்.பி.வேலுமணி கேள்வி!

Stalin Navaneethakrishnan HT Tamil
Jan 28, 2025 07:31 PM IST

‘அரசுப் பதவியில் உள்ள விடியா திமுக-வின் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், புள்ளி விவரத்துடன் கேட்கப்படும் எங்களது அறிக்கைகளுக்கு பதில் அளிக்க முடியாமல் தனிப்பட்ட முறையில், அரசுப் பதவியில் இருக்கிறோம் என்ற நெறிமுறை சிறிதும் இன்றி வசைபாடி, குற்றம் சாட்டி சம்பந்தமில்லாமல் பதில் அளிக்கின்றனர்’

‘வசைபாடுவது இருக்கட்டும்.. பதில் வேணும்..’ புள்ளி விபரத்துடன் எஸ்.பி.வேலுமணி கேள்வி!
‘வசைபாடுவது இருக்கட்டும்.. பதில் வேணும்..’ புள்ளி விபரத்துடன் எஸ்.பி.வேலுமணி கேள்வி! (This is a photo created in AI technology)

‘‘தமிழ் நாட்டின் GSDP, கடந்த பல ஆண்டுகளாக தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இரண்டாவது இடத்தில்தான் உள்ளது. 1960-ஆம் ஆண்டு முதலே தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தமிழ் நாட்டின் பங்களிப்பு சில ஆண்டுகள் தவிர, மற்ற ஆண்டுகளில் 8 முதல் 9 சதவீதமாகத்தான் இருந்து வருகிறது. ஆனால் தொழில் துறை மந்திரி 26.1.2025 அன்று வெளியிட்ட அறிக்கையில், தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தமிழ் நாட்டை இரண்டாம் இடத்திற்கு விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசுதான் கொண்டு வந்ததுபோல் கூறுகிறார்.

1960-61ல் 8.7ரூ-ஆக இருந்த பங்களிப்பை, 2023-24-ல் 8.9ரூ ஆக உயர்த்தியது திமுக-வின் பெரும் சாதனை என்று அவர் கூறுகிறார். அமைச்சர் கூறியபடி, பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் அறிக்கையில், இந்திய உற்பத்தி மதிப்பில், தமிழ் நாட்டின் பங்களிப்பு கீழ்க்கண்டவாறு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

1960-61 - 8.7 ரூ

1970-71 - 7.3 ரூ

1980-81 - 6.9 ரூ

1990-91 - 7.1 ரூ

2000-01 - 8.3 ரூ

2010-11 - 8.4 ரூ

2020-21 - 8.9 ரூ

2023-24 - 8.9 ரூ

மத்திய தணிக்கை குழுவின் அறிக்கைபடி GSDP அளவு

2016-17ல் 8.46ரூ

2017-18ல் 8.57ரூ

2018-19ல் 8.62ரூ

2019-20ல் 8.68ரூ

2020-21ல் 8.90ரூ

2021-22ல் 8.72ரூ

2022-23ல் 8.81ரூ

2023-24ல் 8.90ரூ

என உள்ளது. 2023-24ஆம் ஆண்டுக்கான, மேற்குறிப்பிட்டுள்ள விபரங்கள்கூட, முதற்கட்ட மதிப்பீடுதான். இறுதி மதிப்பீட்டில் இந்தப் புள்ளி விவரம்கூட மாறலாம். எனவே, 2020-21ஆம் ஆண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் இருந்த, அதே 8.90ரூ அளவிலேயே இந்தப் பங்களிப்பு உள்ளது. நிலைமை இப்படி இருக்க, விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியில், என்ன சாதனை செய்துவிட்டதாக தொழில் துறை மந்திரி கூறுகிறார் என்பது விந்தையாக உள்ளது.

வெற்றறிக்கை வெளியிட்டு வரும் ஸ்டாலின்

வெற்றறிக்கை வெளியிட்டு வரும் ஸ்டாலின் மாடல் ஆட்சியில், இந்த இரண்டாவது இடத்தைக்கூட குஜராத்தோ, உத்திரப் பிரதேசமோ பிடித்துவிட்ட நிலையில், தமிழ் நாட்டை பின்னுக்குத் தள்ளிவிட்டதுதான் உண்மை. தொழில் துறை மந்திரியின் பதிலைப் பார்ககும்போது, சட்டியில் இருந்தால்தானே, அகப்பையில் வரும் என்ற முதுமொழிதான் நினைவுக்கு வருகிறது.

மேலும், வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் உள்நாட்டுத் தொழில் முதலீடுகள் மூலம் தமிழகத்தில் 10.07 லட்சம் கோடி முதலீடு என்று தொழில்துறை மந்திரி குறிப்பிடுவது புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மட்டுமே. பிற மாநிலங்களைப்போல டாவோஸ் நகரில் தமிழ் நாடு ஏன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளவில்லை என்பதற்கு பதில் இல்லை.

19.17 லட்சம் பேருக்கு ‘நேரடி வேலை வாய்ப்பு’ மற்றும் 31.53 லட்சம் பேருக்கு ‘மொத்த வேலை வாய்ப்பு’ என்ற அவரது கூற்று மீண்டும் ஒரு கற்பனையான விவரம்தான். உண்மையான முதலீடு எவ்வளவு என்று கழகப் பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்கள் கேட்ட கேள்விக்கு நேரடி பதில் இல்லை. மேலும், தொழிற்சாலைகள் வாரியாக விபரங்கள் தரப்படவுமில்லை. தமிழகத்தில் பெரிய அளவிலான வேலை வாய்ப்பு

உருவாக்கத்தின் தாக்கம் உண்மையில் இதுவரை தென்படவில்லை. மொத்தத்தில் இந்தப் புள்ளி விவரம் ஒரு ஏட்டு சுரைக்காய்தான். அம்மாவின் ஆட்சிக் காலத்தில், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இதுபோல் உண்மையான முதலீட்டு விவரங்களைக் கேட்டு அம்மா அரசின் மீதும், தனிப்பட்ட முறையில் எங்களைக் குறிவைத்துத் தாக்கியும் அறிக்கை வெளியிட்டபோதுகூட ‘அரைவேக்காடு’ என்ற வார்த்தைகளை அம்மாவின் அரசு ஒருபோதும் பயன்படுத்தவில்லை.

சம்மந்தம் இல்லாமல் பதில் தருகிறார்கள்

ஆனால், தற்போது அரசுப் பதவியில் உள்ள விடியா திமுக-வின் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், புள்ளி விவரத்துடன் கேட்கப்படும் எங்களது அறிக்கைகளுக்கு பதில் அளிக்க முடியாமல் தனிப்பட்ட முறையில், அரசுப் பதவியில் இருக்கிறோம் என்ற நெறிமுறை சிறிதும் இன்றி வசைபாடி, குற்றம் சாட்டி சம்பந்தமில்லாமல் பதில் அளிக்கின்றனர். எங்கள் கேள்விகளுக்கு நேரடியான பதில் இல்லை என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.

கடந்த நான்கு ஆண்டுகால திமுக ஆட்சியில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் நான்கு முறை வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஈர்க்கப்பட்ட முதலீடுகள் எவ்வளவு என்றும்; தற்போது, டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எத்தனை போடப்பட்டது என்றும், அதில் இதுவரை உண்மையாக ஈர்க்கப்பட்ட முதலீடுகள் எவ்வளவு என்றும், எங்கள் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் எடப்பாடியார் எழுப்பிய கேள்விகளுக்கு, பிரச்சனையை திசை திருப்பாமல் நேரடியான, சரியான புள்ளி விவரங்களை விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசின் தொழில் துறை மந்திரி பதில் அளித்தால் நல்லது,’’

என்று அந்த அறிக்கையில் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.