’தென்மேற்கு பருவமழை வரும் மே 13ஆம் தேதி முதல் தொடங்க வாய்ப்பு!’ 6 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!
”வரும் மே 13ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது”

’தென்மேற்கு பருவமழை வரும் மே 13ஆம் தேதி முதல் தொடங்க வாய்ப்பு!’ 6 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!
வரும் மே 13ஆம் தேதி வாக்கில் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தென்மேற்கு பருவமழை
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்மேற்கு பருவமழை அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 13-ஆம் தேதி வாக்கில் துவங்கக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.