Annamalai: மோடியை சந்தித்த ஆளுநர்! பற்ற வைத்த நெருப்பு! மாற்றப்படுகிறாரா அண்ணாமலை?
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Annamalai: மோடியை சந்தித்த ஆளுநர்! பற்ற வைத்த நெருப்பு! மாற்றப்படுகிறாரா அண்ணாமலை?

Annamalai: மோடியை சந்தித்த ஆளுநர்! பற்ற வைத்த நெருப்பு! மாற்றப்படுகிறாரா அண்ணாமலை?

Kathiravan V HT Tamil
Dec 24, 2024 05:27 PM IST

டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் தமிழ்நாடு அரசியல் நிலவரங்கள், அதிமுக கூட்டணி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக சில தகவல்கள் கேட்டுப்பெறப்பட்டுள்ள நிலையில் தமிழக பாஜகவிலும் சில மாற்றங்கள் ஏற்படலாம் என கூறப்படுகின்றது.

மோடியை சந்தித்த ஆளுநர்! பற்ற வைத்த நெருப்பு! மாற்றப்படுகிறாரா அண்ணாமலை?
மோடியை சந்தித்த ஆளுநர்! பற்ற வைத்த நெருப்பு! மாற்றப்படுகிறாரா அண்ணாமலை?

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், தொடர்ந்து அவரது பதவியில் நீடித்து வருகிறார். மீண்டும் ஆளுநராக ஆர்.என்.ரவியே தொடர வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து பேசி உள்ளார். 

ஆளுநர் உரையுடன் தொடங்கும் பேரவை!

வரும் ஜனவரி 6ஆம் தேதி அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை ஆளுநர் உரை உடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய சபாநாயகர் அப்பாவு, சொந்த கருத்துகள் ஏதும் கூறாமல், ஆளுநர் தனது உரையை வாசிப்பார் என நம்புவதாக கூறினார். கடந்த காலங்களில் ஆளுநர் தனது உரையை முழுமையாக படிக்கவில்லை என்றும் அவர் கூறி இருந்தார். 

கடந்த காலங்களில் ஆளுநர் உரையின் போது ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து இருந்தனர். இந்த நிலையில் தொடங்க உள்ள சட்டமன்றத் தொடரின் முதல் கூட்டத்தில் ஆளுநர் என்ன சொல்லப்போகிறார் என்ற கேள்வி எழுந்து உள்ளது. இது தொடர்பாக டெல்லியில் முக்கிய நபர்களிடம் சில ஆலோசனைகளையும் ஆளுநர் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.

மாற்றப்படுகிறாரா அண்ணாமலை?

வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியை பாஜக தேசிய தலைமை விரும்புவதாக கூறப்படுகிறது. இதனை புரிந்து கொண்ட எடப்பாடி பழனிசாமியும் மத்திய அரசை விமர்சிப்பதில் மென்மை போக்கை கடைப்பிடிப்பதாகவும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 

அதே நேரத்தில் லண்டன் சென்று வந்த பிறகு மைத்துனரின் நண்பருக்கு தொடர்பான இடங்களில் ஐ.டி.ரெய்டு நடைபெற்று உள்ளது. பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. அவரது பதவிக்காலமும் முடிந்து உள்ள நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் அல்லது வேறு சில நபர்களை பாஜக தலைவராக நியமனம் செய்வது குறித்து டெல்லி தலைமை ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. அதே வேளையில் அண்ணாமலைக்கு தேசிய அளவில் பொறுப்புகளை வழங்கவும் தலைமை பரிசீலிக்கிறதாம். இதன் மூலம் அதிமுக- பாஜக கட்சிகள் இடையே உள்ள விரிசல் நிலை மாறி மீண்டும் இணக்கத்திற்கு திரும்பலாம் என்பதே தேர்தல் கணக்காக உள்ளது என கமலாலய வட்டாரங்கள் கூறுகின்றன. 

டெல்லி சென்றுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் தமிழ்நாடு அரசியல் நிலவரங்கள், அதிமுக கூட்டணி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக சில தகவல்கள் கேட்டுப்பெறப்பட்டுள்ள நிலையில் தமிழக பாஜகவிலும் சில மாற்றங்கள் ஏற்படலாம் என கூறப்படுகின்றது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.