Samantha: சமந்தாவை சந்திக்கும் நாக சைதன்யா?
சமந்தா தென்கொரியாவில் இருந்து வந்ததும் அவரை நாக சைதன்யா சந்திக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
சமந்தா மயோசிடிஸ் என்ற தசை பிரச்னையால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
சமந்தாவின் உடல்நிலை மிகவும் மோசமாகிவிட்டதாகவும், தற்போது அவர் மேல் சிகிச்சைக்காக தென்கொரியாவுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்காவை விட தென் கொரியாவில் மட்டுமே மயோசிடிஸுக்கு மிகவும் நவீன மற்றும் பாரம்பரிய மருத்துவம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமந்தாவின் நோய்க்கு மனஅழுத்தம் தான் காரணம். நாக சைதன்யாவுடனான காதல் முறிவுக்குப் பிறகு, சமந்தா மிகவும் நொந்து போனார். மன உளைச்சலுக்கு ஆளானார். இந்த வரிசையில், அவர் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டார் மற்றும் தசைகளில் அதிக அழுத்தம் கொடுத்தார்.
அதனால் தான் மயோசிடிஸ் என்ற அரிதான உயிருக்கு ஆபத்தான ‘தசை சிதைவு’ நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தென்கொரியாவில் இருந்து வந்தது சமந்தாவை, க சைதன்யா சந்திக்கப் போவதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து சமந்தாவின் மேனேஜரிடம் நாகசைதன்யா முன்கூட்டியே சொல்ல, அவர் சமந்தாவிடம் கூறியுள்ளார்.
சமந்தாவும், நாக சைதன்யாவை சந்திக்க சம்மதித்தார். இந்த செய்தியில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. இந்த செய்தி சமந்தா மற்றும் நாக சைதன்யா ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டாபிக்ஸ்