Singappenney: மதராஸ் மாகாணத்தின் முதல் இந்து பட்டதாரி பெண்! யார் இந்த ஆர்.எஸ்.சுபலட்சுமி!
தனது வாழ்நாளின் தொடக்கத்தில் ‘லிட்டில் விடோ’ என்றே அறியப்பட்ட கைம்பெண் சுப லட்சுமி தனது கல்வியால் தன் வாழ்வை மீட்டுறுவாக்கம் செய்ததோடு ஆயிரக்கணக்கான பெண்களை கல்வியின் பால் ஈர்க்கும் கருவியாக செயல்பட்டார் ஆர்.எஸ்.சுபலட்சுமி.

அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பெதற்கு என்பதைப்போல அரசியல் எதற்கு என்று பேசப்பட்ட காலமும் இருந்தது. ஆனால் இந்திய வரலாற்றில் சுதந்திர போராட்டம் தொடங்கி தங்களுக்கு கிடைந்த வாய்ப்பை பயன்படுத்தி காலம் காலமாக அரசியல் உள்ளிட்ட பல துறைகளில் களமாடிய பெண்கள் ஏராளமானோர் உள்ளனர். அப்படியான பெண் ஆளுமைகளை திரும்பி பார்க்கும் ஒரு முயற்சியே இது.
மதராஸ் மாகாணத்தின் முதல் முதல் இந்து பட்டதாரி பெண் ஆர்.எஸ். ஆர்.எஸ்.சுப லட்சுமி நினைவு நாள் இன்று இந்த நாளில் அவர் குறித்த சில தகவல்களை இங்கு பார்க்கலாம்
பிறப்பு
சகோதரி சுப லட்சுமி என்று அழைக்கப்பட்ட ஆர். எஸ் சுப லட்சுமி சென்னையில் மயிலாப்பூரில் ஒரு பிராமண குடும்பத்தில் 1886 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை சுப்பிரமணிய ஐயர். தாயார் விசாலாட்சி. தந்தை சுப்ரமணிய ஐயர் அரசு பொதுப்பணித்துறையில் பொறியாளராக பணியாற்றியவர். தஞ்சை வைகளத்தூர்தான் இவர்களது பூர்வீகம்