மனநலம்பாதித்த கணவர் – மாந்திரீகம் செய்து குணப்படுத்த முயன்று மாட்டிக்கொண்ட பெண்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  மனநலம்பாதித்த கணவர் – மாந்திரீகம் செய்து குணப்படுத்த முயன்று மாட்டிக்கொண்ட பெண்

மனநலம்பாதித்த கணவர் – மாந்திரீகம் செய்து குணப்படுத்த முயன்று மாட்டிக்கொண்ட பெண்

Priyadarshini R HT Tamil
Published Apr 01, 2023 08:56 AM IST

மனநலம் பாதிக்கப்பட்ட கணவரை மாந்திரீகம் செய்து குணப்படுத்துவதாக கூறி ரூ.65 லட்சம் மோசடி செய்த தம்பதி உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

எனதுகணவர் 2003ம் ஆண்டு முதல் மனநலம்பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், தேனி மாவட்டம் தேவதானப் ட்டி ஆசாரி தெருவைசேர்ந்த சந்திரசேகரன் அவருடைய மனைவி விஜி ஆகியோர் எனது மாமியாரிடம் அறிமுகம்ஆனார்கள். அவர்கள் எனது கணவருக்கு நேரம்சரியில்லை என்றும், தேவதானப்பட்டியில் உள்ள கோயில் மற்றும் எங்களதுவீட்டில் வைத்து பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என்றும் எனது மாமியாரிடம் கூறினர்.

பரிகாரம்செய்வதற்கு பூஜை மற்றும் மலையாளகுருஜி பூஜை போன்றவை செய்தால்உடல்நிலை மற்றும் மனநிலை சரியாகிவிடும் என்றார்கள். அதை நம்பிய எங்களிடம் 2003ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையிலான கால கட்டங்களில் ஜோதிட பரிகாரம், மாந்திரீக பூஜைகளுக்கு பணம் வேண்டும் என்றுகேட்டனர்.

நாங்களும் எனது கணவர் குணமாக வேண்டும் என்று எண்ணி, அவருடைய மனைவியிடம் ரொக்கமாகவும், அவர்கள் கூறியதன்பேரில் பாண்டி, ரமேஷ், ஆனந்த் என்பவர்களின் வங்கிக்கணக்கிலும் பல்வேறு தேதிகளில் கொஞ்சம் கொஞ்சமாக ரூ.65 லட்சம் வரை அனுப்பினோம். அவர்களும் பல்வேறு பூஜைகளை செய்தார்கள். 

ஆனால்எனது கணவரின் மன நல பாதிப்பு பிரச்னையில் எவ்வித முன்னேற்றமும்இல்லை. இதனால் பணத்தை திருப்பிக் கேட்டபோது அவர்கள் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல்விடுத்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கமாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு எஸ்பி உத்தரவிட்டார். அதன்பேரில், மாந்திரீக பூஜைகள் செய்வதாக கூறி பணம் மோசடிசெய்ததாக சந்திரசேகரன், விஜி, பாண்டி ரமேஷ், ஆனந்த் ஆகிய 4 பேர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அரங்க நாயகி வழக்குப்பதிவு செய்தார். இதில் சந்திரசேகரன், விஜி, ஆனந்த் ஆகிய 3 பேரை போலீசார் கைதுசெய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்