சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு.. செந்தில் பாலாஜியின் சகோதரர் நேரில் ஆஜர்.. பிணைதொகையை கட்டச்சொல்லி வழக்கு ஒத்திவைப்பு
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு.. செந்தில் பாலாஜியின் சகோதரர் நேரில் ஆஜர்.. பிணைதொகையை கட்டச்சொல்லி வழக்கு ஒத்திவைப்பு

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு.. செந்தில் பாலாஜியின் சகோதரர் நேரில் ஆஜர்.. பிணைதொகையை கட்டச்சொல்லி வழக்கு ஒத்திவைப்பு

Marimuthu M HT Tamil Published Apr 09, 2025 03:54 PM IST
Marimuthu M HT Tamil
Published Apr 09, 2025 03:54 PM IST

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜியின் சகோதரர் நேரில் ஆஜரான நிலையில் பிணைதொகையை கட்டச்சொல்லி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு.. செந்தில் பாலாஜியின் சகோதரர் நேரில் ஆஜர்.. பிணைதொகையை கட்டச்சொல்லி வழக்கு ஒத்திவைப்பு
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு.. செந்தில் பாலாஜியின் சகோதரர் நேரில் ஆஜர்.. பிணைதொகையை கட்டச்சொல்லி வழக்கு ஒத்திவைப்பு

அசோக் குமார் மற்றும் அவருடைய உதவியாளர்களுக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பிய நிலையில் இன்று நேரில் ஆஜர் ஆகியிருக்கிறார், அசோக் குமார். குறிப்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் ஆஜராகி இருக்கிறார். இதன்மூலம் இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் பொதுவெளிக்கு வந்துள்ளார்.

செந்தில் பாலாஜி அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணி பெற்றுத் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக, 2023ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்தனர், அமலாக்கத்துறையினர். அப்போது அவர் மீது சட்டவிரோதப் பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன்பின், சிறையில் இருந்த செந்தில் பாலாஜி, கடந்த 2014ஆம் ஆண்டு பிணையில் வெளியே வந்து மீண்டும் திமுக அரசில் அமைச்சர் ஆனார்.

கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் சிக்கிய அசோக் குமார்:

மேலும், இவ்வழக்கில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார், முன்னாள் உதவியாளர் சண்முகம் உள்ளிட்ட 13 பேர் மீது சந்தேகத்தைக் கிளப்பியது. கடந்த 2025 ஜனவரி மாதம் கூடுதல் குற்றப்பத்திரிகை வெளியானது. கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் அவர் மீது பகிரங்கமாக குற்றம்சாட்டியது.

சம்மனால் வந்த அசோக் குமார்:

அதன்பின் கூடுதல் குற்றப்பத்திரிகையில் தொடர்பு இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் உள்ளிட்ட 13 பேர் நேரில் ஆஜராகக் கோரி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். கார்த்திகேயன் சம்மன் அனுப்பி உத்தரவு பிறப்பித்து இருந்தார். அதன்பேரில், அசோக் குமார் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் நேரில் ஆஜர் ஆகினார்.

நீதிமன்றத்தில் நடந்தது என்ன?:

அப்போது, நீதிபதி முன், செந்தில் பாலாஜி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆவணங்கள் உள்ளன என்று அமலாக்கத்துறை வாதாடி இருக்கிறது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ஒவ்வொரு நபரும் எவ்வளவு தொகை முறைகேடு செய்துள்ளனர் எனக் கேள்வி எழுப்பினார். அப்போது அமலாக்கத்துறையினர், ‘’ ஒவ்வொரு நபரும் எவ்வளவு தொகை முறைகேடு செய்தனர் என்கிற தரவுகளை தெரிவிக்க காலஅவகாசம் வேண்டும்'’ எனக் கூறினர்.

அதைத்தொடர்ந்து, குற்றப்பத்திரிக்கை நகலை வழங்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்.25-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

மேலும், ஏப்ரல் 20ஆம் தேதி ஜாமீன் உத்தரவாத தொகையாக தலா ரூ.2 லட்சம் செலுத்த அசோக்குமார் உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறிப்பாக, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் பொதுவெளிக்கு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.