ADMK-BJP alliance: ’புத்தி இருக்கவன் இதை பண்ணுவானா? இனி அவ்ளோதான்!’ ஈபிஎஸ் முடிவை சாடும் எஸ்.பி.லட்சுமணன்!
"புத்தியுள்ள எந்த அரசியல் கட்சியும் தேர்தலுக்கு ஒரு வருடம் முன்பு இப்படி கூட்டணியை அறிவிக்காது. இதனால் அதிமுக தொண்டர்கள் புழுங்கி புழுங்கி சாவார்கள்" என்று கடுமையாகக் கூறினார். அவர் மேலும், "பாஜகவின் தவறுகளுக்கு அதிமுகவே விளக்கம் சொல்ல வேண்டிய நிலை வரும். இது அதிமுகவுக்கு எந்தப் பயனையும் தராது"

பாஜகவுடன் கூட்டணி வைக்கும் எடப்பாடி பழனிசாமியின் முடிவு அதிமுகவை பலவீனப்படுத்தும் என மூத்த பத்திரிக்கையாளர் எஸ்.பி.லட்சுமணன் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக தனியார் யூடியூப் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில், தமிழ்நாடு அரசியல் களத்தில் அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் உறுதியாகியுள்ள நிலையில், இந்த முடிவு அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியின் ஆளுமைப் பண்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார். அவரது சமீபத்திய நேர்காணலில், இந்தக் கூட்டணியின் அறிவிப்பு, அதன் நேரம், மற்றும் அதிமுக தொண்டர்களின் மனநிலை குறித்து விமர்சனங்களை முன்வைத்தார்.
கூட்டணி அறிவிப்பு: அவசரமும் குழப்பமும்
எஸ்.பி.லட்சுமணன், அதிமுக-பாஜக கூட்டணி அறிவிப்பு ஒரு வருடத்துக்கு முன்னதாகவே வெளியிடப்பட்டதை விமர்சித்தார். "புத்தியுள்ள எந்த அரசியல் கட்சியும் தேர்தலுக்கு ஒரு வருடம் முன்பு இப்படி கூட்டணியை அறிவிக்காது. இதனால் அதிமுக தொண்டர்கள் புழுங்கி புழுங்கி சாவார்கள்" என்று கடுமையாகக் கூறினார். அவர் மேலும், "பாஜகவின் தவறுகளுக்கு அதிமுகவே விளக்கம் சொல்ல வேண்டிய நிலை வரும். இது அதிமுகவுக்கு எந்தப் பயனையும் தராது" என்று வாதிட்டார்.
