அண்ணா பல்கலைக்கழக விவகாரம்! வடநாடுனா வைலண்ட்! தமிழ்நாடுனா சைலண்டா? ராகுல் காந்தியை விளாசும் பத்திரிக்கையாளர் மணி!
ஒரு வாரம் முன் மகாராஷ்டிராவில் ஒரு தலித் பெண் படுகொலை செய்யும் போது சென்றார். போய் வாருங்கள் தப்பில்லை. பாஜக ஆளும் மாநிலம் என்றால் வாயை திறப்பீர்கள். இந்த கேடுகெட்ட அரசியலுக்கு என்ன பெயர் என ராகுல் காந்திக்கு மூத்த பத்திரிகையாளர் மணி கேள்வி

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்! வடநாடுனா வைலண்ட்! தமிழ்நாடுனா சைலண்டா? ராகுல் காந்தியை விளாசும் பத்திரிக்கையாளர் மணி!
என்ன நடந்தாலும் பொங்கி எழும் ராகுல் காந்தி அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன் கொடுமை விவகாரத்தில் வாயை திறந்தாரா? என மூத்த பத்திரிக்கையாளர் மணி கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழ்நாட்டில் தொடரும் வன்கொடுமைகள்
இது தொடர்பாக தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், என்ன நடந்தாலும் பொங்கி எழும் ராகுல் காந்தி வாயை திறந்தாரா?. அண்ணாநகரில் 3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை என்று புகார் கொடுக்க சென்ற குழந்தையின் பெற்றோரை நிர்வாணமாக்கி அடித்து உள்ளனர். உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.
20 வயது மனநலம் பாதிக்கப்பட்ட மாணவியை 7 மாணவர்கள் 6 மாதகாலம் வால்டாக்ஸ் சாலையில் பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர். இந்த 7 மாணவர்களையும் எச்சரித்து, புத்தி சொல்லி அனுப்பி உள்ளனர்.
