'துரைமுருகனை நெருங்கும் ED?' கனிமவளத்துறை இலாகா மாற்றத்தின் பின்னணி! உடைத்து பேசும் குபேந்திரன்!
கடந்த காலங்களில், மணல் குவாரி மற்றும் கனிம வளங்களின் கடத்தல் தொடர்பான புகார்கள், மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது, மற்றும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் ஆகியவை இத்துறையை சிக்கல் நிறைந்ததாக்கியுள்ளன.

'துரைமுருகனை நெருங்கும் ED?' கனிமவளத்துறை இலாகா மாற்றத்தின் பின்னணி! உடைத்து பேசும் குபேந்திரன்!
அமலாக்கத்துறை உள்ளிட்ட புலானாய்வு அமைப்புகளின் பார்வை கனிமவளத்துறை மீது உள்ளதன் காரணமாகவே துரைமுருகனின் இலாகா மாற்றப்பட்டதாக மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு அரசின் அமைச்சரவையில் அமைச்சர் துரைமுருகனிடமிருந்து கனிமவளத்துறை பறிக்கப்பட்டு சட்டத்துறை வழங்கப்பட்டு உள்ளது. இந்த மாற்றத்தின் பின்னணியில் அரசியல் மற்றும் நிர்வாக காரணங்கள் உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்து உள்ளார்.