தமிழ்நாடு சட்டப்பேரவை: ‘எடப்பாடி பழனிசாமியை வணங்கி என்று சொல்லி உரையைத் தொடங்கிய செங்கோட்டையன்’!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தமிழ்நாடு சட்டப்பேரவை: ‘எடப்பாடி பழனிசாமியை வணங்கி என்று சொல்லி உரையைத் தொடங்கிய செங்கோட்டையன்’!

தமிழ்நாடு சட்டப்பேரவை: ‘எடப்பாடி பழனிசாமியை வணங்கி என்று சொல்லி உரையைத் தொடங்கிய செங்கோட்டையன்’!

Marimuthu M HT Tamil Published Apr 24, 2025 01:46 PM IST
Marimuthu M HT Tamil
Published Apr 24, 2025 01:46 PM IST

தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிசாமியை வணங்கி என்று குறிப்பிட்டு செங்கோட்டையன் பேசினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை: ‘எடப்பாடி பழனிசாமியை வணங்கி என்று சொல்லி உரையைத் தொடங்கிய செங்கோட்டையன்’!
தமிழ்நாடு சட்டப்பேரவை: ‘எடப்பாடி பழனிசாமியை வணங்கி என்று சொல்லி உரையைத் தொடங்கிய செங்கோட்டையன்’!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.

அப்போது பேசிய அதிமுக எம்.எல்.ஏ செங்கோட்டையன், ‘எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் நல்லாட்சி நடத்திய எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடியாரை வணங்கி உரையைத் தொடங்குகிறேன்’ எனத் தெரிவித்தார். இது அங்கிருக்கும் அதிமுக எம்.எல்.ஏக்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சிக்க வைத்த சபாநாயகர்:

அப்போது நல்லாட்சி நடத்திக்கொண்டிருக்கின்ற எதிர்க்கட்சித்தலைவர் எனக் குறிப்பிட்டு செங்கோட்டையன் பேசியதற்கு, ’நல்லாட்சி நடத்திக் கொண்டிருப்பது எங்கள் முதலமைச்சரா அல்லது வேறா? ’ என செங்கோட்டையனிடம் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பினார்.

அதற்கு ‘நல்லாட்சி’ என்றுதானே நான் குறிப்பிட்டேன்; ‘என்னை எப்படி சிக்கவைக்குறீங்க’ என சிரித்துக்கொண்டே செங்கோட்டையன் பதில் கூறினார். இதனால் அவையில் கலகலப்பு நிலவியது.

நேற்று ஆப்சென்ட்; இன்று புகழுரை:

முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சென்னை இல்லத்தில் ஏப்ரல் 23ஆம் தேதியான நேற்று அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு விருந்து அளித்தார். அதில் சிக்கன், மட்டன் பிரியாணி, மீன், முட்டை, இறால் என 6 வகை அசைவ உணவுகள் முக்கிய இடம் பிடித்தன. இதில் அதிமுக முன்னாள் அமைச்சரும் கோபிசெட்டிபாளையம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவுமான செங்கோட்டையன் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் செங்கோட்டையன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக சட்டப்பேரவையில் புகழுரை நிகழ்த்தியிருக்கிறார்.

Marimuthu M

TwittereMail
ம.மாரிமுத்து, சீஃப் கன்டென்ட் எடிட்டராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். அச்சு, காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகம் என 11+ ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, சினிமா, ஜோதிடம், லைஃப்ஸ்டைல், தேசம்-உலகம், கிரிக்கெட் உள்ளிட்டப் பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் கட்டுரைகளை எழுதி வருகிறார். சிவகங்கையிலுள்ள பண்ணை பொறியியல் கல்லூரியில் எம்.இ- ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங் மற்றும் தென்காசி - புளியங்குடியிலுள்ள எஸ்.வி.சி.பொறியியல் கல்லூரியில் பி.இ - சிவில் இன்ஜினியரிங்கும் படித்திருக்கிறார். விகடன், மின்னம்பலம்,காவேரி நியூஸ் டிவி, நியூஸ்ஜே டிவி, ஈடிவி பாரத் ஆகிய ஊடகங்களைத் தொடர்ந்து 2023 ஆகஸ்ட் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். விகடனின் தலைசிறந்த மாணவப்பத்திரிகையாளர் 2014-15ஆக விருதுபெற்றவர். இவரது சொந்த ஊர் வடுகபட்டி, தேனி மாவட்டம் ஆகும்.
Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.