TN Assembly: 'மதுரை தென்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்.. புறவழிச்சாலை அமைக்கப்படுமா?’: செல்லூர் ராஜூ கேள்வி
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Tn Assembly: 'மதுரை தென்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்.. புறவழிச்சாலை அமைக்கப்படுமா?’: செல்லூர் ராஜூ கேள்வி

TN Assembly: 'மதுரை தென்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்.. புறவழிச்சாலை அமைக்கப்படுமா?’: செல்லூர் ராஜூ கேள்வி

Marimuthu M HT Tamil Published Apr 08, 2025 11:49 AM IST
Marimuthu M HT Tamil
Published Apr 08, 2025 11:49 AM IST

TN Assembly: மதுரை தென்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக புறவழிச்சாலை அமைக்கப்படுமா என செல்லூர் ராஜூ தமிழக சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

TN Assembly: 'மதுரை தென்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்.. புறவழிச்சாலை அமைக்கப்படுமா?’: செல்லூர் ராஜூ கேள்வி
TN Assembly: 'மதுரை தென்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்.. புறவழிச்சாலை அமைக்கப்படுமா?’: செல்லூர் ராஜூ கேள்வி

செல்லூர் ராஜூ சட்டப்பேரவையில் பேசுகையில், ‘மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே.. மதுரையில் மக்கள் பெருக்கம் அதிகமாகிவிட்டது. ஏன் எங்க மேற்குத் தொகுதியில் மதுரை காளவாசலில் இருந்து அரசரடி வரை போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருக்கிறது. கோட்டயம், கொச்சி, எர்ணாகுளம், அதேமாதிரி மூணாறு போவதற்கு இந்த ஒரே சாலை தான். இந்த கடும் நெருக்கடியைப் போக்குவதற்கு மாற்று வழியாக, தென்பகுதியில் வைகையாற்றை ஒட்டி புறவழிச்சாலை அமைத்தால் எந்த ஒரு இட நெருக்கடியும் இருக்காது. எனவே, தென்வழியில் புறவழிசாலை அமைக்கப்படுமா?’ என ஆளும் தரப்பினரிடம் புன்னகை ததும்ப கேள்வி எழுப்பினார், செல்லூர் ராஜு.

அமைச்சர் எ.வ.வேலுவின் பதில்

அதன்பின் செல்லூர் ராஜுவின் கேள்விக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்தார். அவர் பேசுகையில், ‘’ தென் பகுதியில் இருக்கும் மதுரைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தான் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றவுடனேயே, நகரப்பகுதியில் இருக்கும் நெரிசலைக் குறைக்க இரண்டு பாலங்கள் கட்டுமானத்துக்கானப் பணிகள் அவரது திருக்கரத்தால் துவக்கி வைக்கப்பட்டு, மேம்பாலப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

’ஆய்வில் இருக்கின்றது’:

 ஒன்று கோரிப்பாளையம் பாலம், இன்னொன்று, அப்போலோ பாலம். செல்லூர் ராஜு சொல்லும் தென்பகுதியில் புறவழிச்சாலை அமைக்கவேண்டும் என்ற விஷயம் அவசியம் தான். ஆனால், அது சரியானதுதானா, என ஆய்வில் இருக்கின்றது. அதிகாரிகளின் ஆய்வுக்குப் பிந்தைய கருத்துக்குப் பின், முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, நிறைவேற்றவேண்டிய பணத்தை ஒதுக்கி அது முடித்துத் தரப்படும்’’ என்றார், அமைச்சர் எ. வ.வேலு.