Seeman : சீமான் வீட்டை முற்றுகையிட முயன்றவர்கள் கைது.. பெரியாரா, பிரபாகரனா.. மோதிப் பார்த்துவிட வேண்டியதுதான்- சீமான்
Seeman : சீமான் பிரபாகரனுடன் எடுத்த புகைப்படம் போலி என்ற சர்ச்சை எழுந்திருந்தநிலையில், இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "எத்தனை பேர் தான் அந்த புகைப்படத்தை எடிட் செய்தார்கள். பெரிய எடிட்டரா நீங்கள் எல்லாம்.. காமெடி செய்து கொண்டிருக்காதீர்கள்.

Seeman : தந்தை பெரியார் திராவிட கழக தலைவர் கு.ராம கிருஷ்ணன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுளளது. முன்னதாக பெரியாரா, பிரபாகரனா என்று ஆகிவிட்டது..மோதிப் பார்த்துவிட வேண்டியதுதான் என செய்தியாளர்களிடம் பேசிய சீமான் தெரிவித்துள்ளார்.
பெரியார் குறித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் சர்ச்சை பேச்சை கண்டிக்கும் வகையில், இன்று பெரியார் கூட்டமைப்பு மற்றும் மே 17 இயக்கத்தினர் இன்று காலை அவரது வீட்டை முற்றுகையிட உள்ளதாக அறிவித்திருந்தனர். முன்னதாக இது தொடர்பான சுவரொட்டிகள் சென்னை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தன. சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீடு முன்பாகவும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. இந்த சூழலில் சென்னை நீலாங்கரையில் முற்றுகையிடும் அமைப்பினருக்கு எதிர்ப்பு தெரிவிக்க சீமான் வீடு முன்பாக ஏராளமான நாம் தமிழர் கட்சியினரும் இரவு முதலே குவிந்திருந்தனர்.
இந்த நிலையில் நீலாங்கரையில் உள்ள நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. பெரியார் கூட்டமைப்பு மற்றும் மே 17 இயக்கத்தினர் இன்று அவரது வீட்டை முற்றுகையிட உள்ள நிலையில், ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் சீமான் வீடு அமைந்துள்ள சென்னை நீலாங்கரை பகுதியில் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது. தற்போது முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
15 ஆண்டுகளாக எங்கு இருந்தீர்கள்
இதனிடையே சீமான் பிரபாகரனுடன் எடுத்த புகைப்படம் போலி என்ற சர்ச்சை எழுந்திருந்தநிலையில், இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், "எத்தனை பேர் தான் அந்த புகைப்படத்தை எடிட் செய்தார்கள். பெரிய எடிட்டரா நீங்கள் எல்லாம்.. காமெடி செய்து கொண்டிருக்காதீர்கள். 15 ஆண்டுகளாக எங்கு இருந்தீர்கள்.
அந்த புகைப்படம் முதல்முறையாக வெளியான போதே சொல்ல வேண்டியது தானே.. பெரியார் மீது விமர்சனம் வைத்த பின்னர், பிரபாகரனுடன் எடுத்த புகைப்படம் பொய் என்று வருகிறார்கள்.
பெரியாரா, பிரபாகரனா என்று ஆகிவிட்டது..மோதிப் பார்த்துவிட வேண்டியதுதான். பெரியாரை விமர்சித்ததற்கு திராவிடர் கழகமே அமைதியாக இருக்கிறது. மற்ற அமைப்புகள் தான் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். கி.வீரமணியை பதில் சொல்ல சொல்லுங்கள். கொளத்தூர் மணி என்பவர் மதிக்கும் பெரிய மனிதர். நான் நா.த.க. கட்சிப் பெயரை சோ.ராமசாமியையும், குருமூர்த்தியையும் அழைத்து சென்று ஆதித்தனார் காலில் விழுந்து வாங்கி வந்தேன் என்கிறார்கள்.
பொய்யை தவிர வேறு எதுவும் கிடையாது. நாம் தமிழர் என்ற பெயர் ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது. சோவுக்கும், குருமூர்த்திக்கும் நா.த.க.வுக்கும் என்ன சம்மந்தம் உள்ளது. நாம் தமிழர் என்ற கட்சிப் பெயரை சோ, குருமூர்த்தி வாங்கி கொடுத்ததற்கான ஆதாரம் என்ன உள்ளது.
தமிழை கொச்சைப்படுத்துவதா
பெரியார் அடிப்படையிலேயே பிழையானவர். தமிழ் முட்டாள்களின் மொழி, தமிழ் சனியன், தமிழில் என்ன இருக்கிறது என்று பேசி இருக்கிறார். என் நிலத்தில் பெரியார் யார்.. நீங்கள் கன்னடன். கர்நாடகா நாட்டில் பிறந்தவர். அவர் என் நிலத்தில் அமர்ந்து தமிழை கொச்சைப்படுத்துவதா..
தமிழன் மட்டும் தான் சூத்திரன் என்று சமஸ்கிருதத்தில் எழுதி இருக்கிறதா.. பெரியார் தொடர்பாக இன்னும் முழுமையாக பேசவே தொடங்கவில்லை. அதற்குள் அலறுகிறார்கள்.. பெரியாரால் தமிழ், தமிழருக்கு நடந்த ஒரு நன்மையை சொல்லுங்கள். பெரியார் குறித்த எனது கருத்துக்கு நீதிமன்றத்தில் வழக்கு வந்தால், அங்கு பதிலளிப்பேன்" என்று சீமான் கூறினார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்