தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Seeman Statement About Teachers Day

Seeman Wishes Teachers Day : மகத்தான மனிதர்களை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள்!

Divya Sekar HT Tamil
Sep 05, 2022 04:01 PM IST

நம் தேசத்தின் வருங்காலமான இளைய சமூகத்தை உருவாக்கித் தரும் ஒவ்வொரு ஆசிரியரையும் இந்த ஆசிரியர் தினத்தில் வணங்கி மகிழ்கிறேன் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

சீமான் வாழ்த்து
சீமான் வாழ்த்து

ட்ரெண்டிங் செய்திகள்

ஒரு தாய் தன் பிள்ளையைப் பத்து மாதங்கள்தான் கருவறையில் சுமக்கிறாள். ஆசிரியப்பெருமக்கள் அறிவுக்கருவறையில் பல ஆண்டுகள் சுமக்கிறார்கள். தாய் தன் குழந்தைக்கு இந்த உலகைக் காட்டுகிறார். ஆசிரியப்பெருமக்கள்தான் குழந்தையை உலகுக்கேக் காட்டுகிறார்கள்.அறிவின் விழிகொண்டு அனைத்தையும் தரிசிக்க கற்றுக்கொடுத்த நல் ஆசிரியர்கள் தான் உலகம் இயங்குவதற்கான அச்சாணிகளாக அமைகிறார்கள்.

எங்கோ வான் பார்த்துக் கிடக்கும் வறண்ட பூமியில் , எளிய கிராமத்தில் பிறந்த என்னையெல்லாம் உருவாக்கி தந்த என் ஆசிரியர் பேரா.தொ.பரமசிவன் தொடங்கிகல்வியையும், உலகத்தையும் கற்றுக் கொடுத்த எனது எல்லா ஆசிரியர்களையும் ஆழ் மன நன்றியோடும் , பெருக்கெடுக்கும் மதிப்போடும் என் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் நான் நினைத்து நெகிழ்கிறேன். 

நம் தேசத்தின் வருங்காலமான இளைய சமூகத்தை உருவாக்கித் தரும் ஒவ்வொரு ஆசிரியரையும் இந்த ஆசிரியர் தினத்தில் வணங்கி மகிழ்கிறேன்..அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்! " என்று குறிப்பிட்டுள்ளார்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்