Seeman: ’பாஜக உடன் கூட்டணி எப்போது? புதிய தலைவருக்கு வாழ்த்து சொல்லிவிட்டேன்!’ அம்பேத்கர் முன் பட்டென பேசிய சீமான்!
“திரும்ப திரும்ப அந்த கேள்வியை எழுப்புறதை நான் வெறுக்கிறேன், அருவருக்கிறேன்” என்று கோபத்துடன் கூறிய அவர், “நான் தனிச்சு போட்டிடுவேன், அதை திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டு இருக்க முடியாது” என்று தெளிவுபடுத்தினார். “தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை இழக்க தயாராக இல்லை” என்று உறுதியாக தெரிவித்தார்.

“எங்களின் பயணம் எங்கள் கால்களை நம்பிதான், அடுத்தவருடைய கால்களை நம்பி எங்கள் லட்சிய பயணம் இல்லை” என்று கூட்டணி குறித்த கேள்விகளுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்து உள்ளார்.
அம்பேத்கரின் புரட்சிகர கருத்துகள்: உரிமைக்கான போராட்டம்
சீமான் தனது உரையை அம்பேத்கரின் உத்வேகமூட்டும் கருத்துகளுடன் தொடங்கினார். “அறிவை தேடி ஓடுங்கள், நாளைய வரலாறு உங்கள் நிழலை தேடி ஓடி வரும்” என்று அவர் மேற்கோள் காட்டி, “நாம் இழந்துவிட்ட உரிமைகளை பிச்சை கேட்டு பெற முடியாது, போராடித்தான் பெற்றாக வேண்டும்” என்று வலியுறுத்தினார். சமூகத்தில் தாழ்ந்து கிடக்கும் மக்களை தட்டியெழுப்பிய அம்பேத்கரின் புரட்சி மொழிகளை பாராட்டினார்.
“கோயில்களில் எப்போதும் ஆடுகளைத்தான் பலியிடுகிறார்கள், சிங்கங்களை அல்ல” என்று கூறிய சீமான், “ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் அடிமையாக வாழ்வதைவிட, ஒரு நொடியேனும் சுதந்திரமாக, வீரமாக வாழ்ந்து சாவது மேலானது” என்று அம்பேத்கரின் உரிமைக்கான உணர்வை மக்களுக்கு எடுத்துரைத்தார். அடிமைப்பட்ட சமூகங்களுக்கு உணர்வு ஊட்டிய புரட்சியாளராக அம்பேத்கரை புகழ்ந்தார்.
