Seeman praises Modi: ‘தமிழின் தொன்மையை உலக அரங்கில் பறைசாற்றும் மோடி’ அண்ணாமலை முன் பிரதமரை புகழ்ந்து தள்ளிய சீமான்!
"இந்த நாட்டின் பிரதமர், மாண்புமிக்க ஐயா நரேந்திர மோடி அவர்கள், உலகம் முழுவதும் செல்கிறார். என்ன சொல்கிறார்? உலகில் முதன்மொழி தமிழ். எங்கள் இந்தியாவில் இருப்பது பெருமை. இந்திய மொழிகளின் தொன்மையை தமிழிலிருந்து அறியலாம்"

Seeman praises Modi: ‘தமிழின் தொன்மையை உலக அரங்கில் பறைசாற்றும் மோடி’ அண்ணாமலை முன் பிரதமரை புகழ்ந்து தள்ளிய சீமான்!
"பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழ் மொழியின் தொன்மையை உலக அரங்கில் பறைசாற்றுகிறார்” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டி உள்ளார்.
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற “சொல் தமிழா சொல்” என்ற பேச்சுப் போட்டி நிகழ்ச்சியில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரதமர் நரேந்திர மோடியை உணர்ச்சி பொங்க புகழ்ந்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நிகழ்ச்சியில் பேசிய சீமான், மோடியை “மாண்புமிக்க ஐயா” என்று அழைத்து, தமிழ் மொழியின் தொன்மையை உலக அரங்கில் பறைசாற்றுவதாக பாராட்டினார்.