’ரெய்டு வந்தால் மோடியை பார்க்க ஓடுகிறீர்கள்! ஆனால் எங்கள் பரம்பரைக்கே பயம் கிடையாது’ முதல்வர் மீது சீமான்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’ரெய்டு வந்தால் மோடியை பார்க்க ஓடுகிறீர்கள்! ஆனால் எங்கள் பரம்பரைக்கே பயம் கிடையாது’ முதல்வர் மீது சீமான்

’ரெய்டு வந்தால் மோடியை பார்க்க ஓடுகிறீர்கள்! ஆனால் எங்கள் பரம்பரைக்கே பயம் கிடையாது’ முதல்வர் மீது சீமான்

Kathiravan V HT Tamil
Published May 23, 2025 05:07 PM IST

"திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இடையே கொள்கை அளவில் என்ன வேறுபாடு உள்ளது? ஊழல், லஞ்சம், மணல் கொள்ளை, மலை கொள்ளை, முறையற்ற நிர்வாகம் போன்றவற்றில் அனைவரும் ஒரே மாதிரியாக இருக்கிறார்கள். கொடிகள் மட்டுமே வேறு, கொள்கைகள் ஒன்றுதான்"

’ரெய்டு வந்தால் மோடியை பார்க்க ஓடுகிறீர்கள்! ஆனால் எங்கள் பரம்பரைக்கே பயம் கிடையாது’ முதல்வர் மீது சீமான்
’ரெய்டு வந்தால் மோடியை பார்க்க ஓடுகிறீர்கள்! ஆனால் எங்கள் பரம்பரைக்கே பயம் கிடையாது’ முதல்வர் மீது சீமான்

திருச்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மாற்று என்றால் புதிய தத்துவம், புதிய கோட்பாடு, ஒரு கருத்தியல் இருக்க வேண்டும். ஆனால், இங்கு அனைத்து கட்சிகளும் ஒரே மாதிரியாக ஓட்டுக்கு பணம், இலவச அறிவிப்புகள், சாராயம் வைப்பது போன்றவற்றை செய்கின்றன. இதில் என்ன மாற்று இருக்கிறது?" என அவர் கேள்வி எழுப்பினார். மக்களை ஏமாற்றுவதாகவும், உண்மையான மாற்று என்பது கொள்கை அளவில் இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

தி.மு.க. மற்றும் முதல்வர் மீது விமர்சனம்

தி.மு.க. அரசையும் முதல்வரையும் சீமான் கடுமையாக விமர்சித்தார். "மூன்று ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டங்களுக்கு செல்லாத முதல்வர் இப்போது ஏன் செல்கிறார்? ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிதி உதவி செய்ய மறுக்கிறது. நமது வரிகளை எடுத்துக்கொண்டு, தேவைப்படும் நேரத்தில் உதவ மறுக்கிறார்கள். இதை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டியது தி.மு.க.வின் பொறுப்பு," என அவர் கூறினார். மேலும், "ஈடி ரெய்டு வந்தால் மோடியை பார்க்க ஓடுகிறீர்கள். பயம் இருக்கிறது," என முதல்வரை குற்றம்சாட்டினார். "எங்கள் பரம்பரைக்கே பயம் கிடையாது," என சீமான் உறுதியாக தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளுக்கு இடையே வேறுபாடு உள்ளதா?

திமுக விற்கு உண்மையான எதிர்க்கட்சி எது என சீமான் கேள்வி எழுப்பினார். "திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றுக்கு இடையே கொள்கை அளவில் என்ன வேறுபாடு உள்ளது? ஊழல், லஞ்சம், மணல் கொள்ளை, மலை கொள்ளை, முறையற்ற நிர்வாகம் போன்றவற்றில் அனைவரும் ஒரே மாதிரியாக இருக்கிறார்கள். கொடிகள் மட்டுமே வேறு, கொள்கைகள் ஒன்றுதான்," என அவர் விமர்சித்தார்.

நீதிமன்றமா, சட்டமன்றமா - நாட்டை ஆள்வது யார்?

"இந்த நாட்டை சட்டமன்றமும் பாராளுமன்றமும் நிர்வாகம் செய்ய வேண்டுமா அல்லது நீதிமன்றமா? எல்லா முடிவுகளையும் நீதிமன்றம் எடுத்தால், சட்டமன்றமும் பாராளுமன்றமும் தேவையில்லையே, கலைத்து விடலாமா?" என சீமான் கேள்வி எழுப்பினார்.  

ஒன்றிய அரசு மீது குற்றச்சாட்டு

"தமிழ்நாட்டின் வரிகளை எடுத்துக்கொண்டு, பேரிடர் காலங்களில் நிதி உதவி செய்ய மறுக்கிறார்கள். கல்வி உதவிகளையும் வழங்க மறுக்கிறார்கள். இதை தேர்தல் நேரத்தில் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு தி.மு.க.விடம் உள்ளது," என சீமான் கூறினார்.