’திமுகவுடன் பாஜக இணக்கமாக இருக்கவே விரும்புகிறது’ சீமான் குற்றச்சாட்டு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’திமுகவுடன் பாஜக இணக்கமாக இருக்கவே விரும்புகிறது’ சீமான் குற்றச்சாட்டு!

’திமுகவுடன் பாஜக இணக்கமாக இருக்கவே விரும்புகிறது’ சீமான் குற்றச்சாட்டு!

Kathiravan V HT Tamil
Published May 24, 2025 02:44 PM IST

“பாஜக அரசு, சந்திரபாபு நாயுடு அல்லது நிதீஷ் குமார் ஆதரவை இழந்தால், திமுக 22 உறுப்பினர்களுடன் ஆதரவு அளிக்கும் என எதிர்பார்க்கிறது. இதனால் திமுக இணக்கமாக இருக்கிறது”

’திமுகவுடன் பாஜக இணக்கமாக இருக்கவே விரும்புகிறது’ சீமான் குற்றச்சாட்டு!
’திமுகவுடன் பாஜக இணக்கமாக இருக்கவே விரும்புகிறது’ சீமான் குற்றச்சாட்டு!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து கேள்வி எழுப்பினார். "கடந்த மூன்று ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டங்களை புறக்கணித்தவர் இப்போது ஏன் செல்கிறார்? மாநிலத்திற்கு நிதி தரவில்லை, ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை என புலம்பியபோது பிரதமரை சந்திக்க வாய்ப்பு இருந்தும் பயன்படுத்தவில்லை. இப்போது அமலாக்கத்துறை (ED) சோதனைகளால் செல்கிறாரா என சந்தேகம் எழுகிறது," என்று சீமான் குற்றம் சாட்டினார்.

"பாஜக அரசின் அரசியல் விளையாட்டு"

"பாஜக அரசு, சந்திரபாபு நாயுடு அல்லது நிதீஷ் குமார் ஆதரவை இழந்தால், திமுக 22 உறுப்பினர்களுடன் ஆதரவு அளிக்கும் என எதிர்பார்க்கிறது. இதனால் திமுக இணக்கமாக இருக்கிறது. மேலும், பாகிஸ்தான் ஆதரவு பேரணியை முதலில் நடத்தியவர் நமது முதலமைச்சர்தான். பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் இதை செய்யாதபோது, ஸ்டாலின் அவசரமாக பேரணி நடத்தியது ஏன்?" என்று சீமான் வினவினார்.

"புல்வாமா தாக்குதல்: பாதுகாப்பு தோல்வியை மறைக்கிறார்களா?"

பகல்ஹாம் தாக்குதல் குறித்து பேசிய சீமான், "தீவிரவாதிகள் எப்படி நாட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர்? பாதுகாப்பு அமைப்பில் பெரிய குறை உள்ளது. விமானத்தில் பயணிக்கும்போது பலமுறை சோதனை செய்யப்படுகிறது, ஆனால் ஒரு தீவிரவாதி ஆயுதங்களுடன் உள்ளே வந்து தாக்கினான். அவனை உடனடியாக சுட்டிருக்க வேண்டும். 10 நாள் கழித்து போர் தொடுத்தது ஏன்? புல்வாமாவில் 42 ராணுவ வீரர்களை பாதுகாக்க முடியவில்லை. போர் நடத்தி பொதுமக்களையும் குழந்தைகளையும் கொல்வதால் என்ன பயன்? தீவிரவாதிகள் உண்மையில் அழிக்கப்பட்டார்களா?" என்று கேள்வி எழுப்பினார்.