’அமைச்சராக தொடர காரணம் என்ன? 10 நாள்தான் டைம்!’அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!
நவம்பர் 8ஆம் தேதி தாக்கல் செயப்பட்ட வழக்கில் இதுவரை பதில்மனு தாக்கல் செய்யாமல் இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஜாமீனை ரத்து செய்யக் கோரும் மனு மீது உச்சநீதிமன்றத்தின் நோட்டீஸ் வரவில்லை என்ற செந்தில் பாலாஜி தரப்பு கூறியதற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

ஜாமீனை ரத்து செய்ய கோரி அமலாக்கத்ததுறை தொடர்ந்த வழக்கில் பதில் தர அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
அமலாக்கத்துறை வழக்கு
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி லஞ்சம் பெற்றுக் கொண்டு சட்டவிரோத பண பரிவர்தனையில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி சுமார் ஓராண்டிற்கும் மேலாக சிறையில் இருந்தார்.
மேலும் படிக்க:- Savukku Shankar: ’சாப்பிடும் டேபிளில் மலம்! வீடு தாக்குதலுக்கு இந்த 2 பேர்தான் காரணம்!’ சவுக்கு சங்கர் பரபரப்பு பேட்டி!
ஜாமீனை ரத்து செய்யக் கோரி வழக்கு
ஜாமீனில் வெளியே வந்த அவர் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், அவரது ஜாமீனை ரத்து செய்யக் கோரி வித்யாகுமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்ந்தால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என்றும். சார்ட்சிகள் முறையாக விசாரிக்க முடியாது என்றும் அமலாக்கத்துறை வாதங்களை முன் வைத்தது.