’அமைச்சராக தொடர காரணம் என்ன? 10 நாள்தான் டைம்!’அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ’அமைச்சராக தொடர காரணம் என்ன? 10 நாள்தான் டைம்!’அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

’அமைச்சராக தொடர காரணம் என்ன? 10 நாள்தான் டைம்!’அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

Kathiravan V HT Tamil
Published Mar 24, 2025 05:24 PM IST

நவம்பர் 8ஆம் தேதி தாக்கல் செயப்பட்ட வழக்கில் இதுவரை பதில்மனு தாக்கல் செய்யாமல் இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஜாமீனை ரத்து செய்யக் கோரும் மனு மீது உச்சநீதிமன்றத்தின் நோட்டீஸ் வரவில்லை என்ற செந்தில் பாலாஜி தரப்பு கூறியதற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

’அமைச்சராக தொடர காரணம் என்ன? 10 நாள்தான் டைம்!’அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!
’அமைச்சராக தொடர காரணம் என்ன? 10 நாள்தான் டைம்!’அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்! (senthil balaji ( FaceBook))

அமலாக்கத்துறை வழக்கு 

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி லஞ்சம் பெற்றுக் கொண்டு சட்டவிரோத பண பரிவர்தனையில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜி சுமார் ஓராண்டிற்கும் மேலாக சிறையில் இருந்தார்.

மேலும் படிக்க:- Savukku Shankar: ’சாப்பிடும் டேபிளில் மலம்! வீடு தாக்குதலுக்கு இந்த 2 பேர்தான் காரணம்!’ சவுக்கு சங்கர் பரபரப்பு பேட்டி!

ஜாமீனை ரத்து செய்யக் கோரி வழக்கு 

ஜாமீனில் வெளியே வந்த அவர் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில், அவரது ஜாமீனை ரத்து செய்யக் கோரி வித்யாகுமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்ந்தால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என்றும். சார்ட்சிகள் முறையாக விசாரிக்க முடியாது என்றும் அமலாக்கத்துறை வாதங்களை முன் வைத்தது. 

மேலும் படிக்க:- சவுக்கு சங்கர் வீடு சூறை: 'பாசிச செயலுக்கு எதிராக குரல் கொடுப்பாரா?’ முதல்வருக்கு எல்.முருகன் சரமாரி கேள்வி!

அமைச்சராக தொடர காரணம் என்ன?

கடந்த முறை கூடிய அமர்வில் “அமைச்சர் பதவியில் ஏன் நீடிக்கிறீர்கள்” என செந்தில் பாலாஜியிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர்.  ஏற்கெனவே 3 முறை வழக்கு விசாரணைக்கு வந்த பிறகும் நோட்டீஸை காரணம் காட்டி பதில் மனுதாக்கல் செய்யாமல் இருப்பது ஏன். ஜாமீனை ரத்து செய்யக் கோரி தொடர்ந்த வழக்கில் 10 நாட்களுக்கு பதில் தர வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.  

செந்தில் பாலாஜி மீது அதிருப்தி 

நவம்பர் 8ஆம் தேதி தாக்கல் செயப்பட்ட வழக்கில் இதுவரை பதில்மனு தாக்கல் செய்யாமல் இருப்பது ஏன்?  என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஜாமீனை ரத்து செய்யக் கோரும் மனு மீது உச்சநீதிமன்றத்தின் நோட்டீஸ் வரவில்லை என்ற செந்தில் பாலாஜி தரப்பு கூறியதற்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். 

10 நாட்கள் கெடு 

உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் ஒரு அமர்வை ஏற்படுத்துவது அவ்வளவு எளிதான காரியமல்ல; ஒவ்வொரு அமர்விலும் இது போன்ற கருத்துகளை தெரிவிப்பதை ஏற்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். ஜாமீனை ரத்து செய்யக் கோரிய மனு மீது 10 நாட்களுக்குள்  செந்தில் பாலாஜி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இதற்கு மேல் கால அவகாசம் வழங்கப்பட்டாது. உச்சநீதிமன்றம் தனது உத்தரவை பிறப்பிக்க நேரிடும் என நீதிபதிகள் கூறினார்.