Savukku Shankar: ’சாப்பிடும் டேபிளில் மலம்! வீடு தாக்குதலுக்கு இந்த 2 பேர்தான் காரணம்!’ சவுக்கு சங்கர் பரபரப்பு பேட்டி!
Savukku Shankar: செல்வப்பெருந்தகை, சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் அவர்களும் சேர்ந்து தூண்டிவிட்டுதான் இந்த தாக்குதல் நடந்து உள்ளது என நான் உறுதியாக நம்புகிறேன். அருண் அவர்கள் செய்யும் முறைகேடுகளை நான் தொடர்ந்து பேசி வருகிறேன்.

Savukku Shankar: ’வீட்டு டைனிங் டேபிளில் மலத்தை ஊற்றிய நபர்கள்! இந்த 2 பேர்தான் காரணம்!’ சவுக்கு சங்கர் பரபரப்பு பேட்டி!
என் வீட்டில் நடந்த தாக்குதலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தை மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் ஆகியோர் காரணம் என யூடியூபரும், பத்திரிகையாளருமான சவுக்கு சங்கர் குற்றம்சாட்டி உள்ளார்.
சவுக்கு சங்கர் செய்தியாளர் சந்திப்பு
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், இன்று காலை 9.30 மணிக்கு அலுவலகத்திற்கு செல்லும் போது என் வாகனத்தின் மீது கல் எறிந்தார்கள். என் அம்மாவிடம் போனில் பேசிக் கொண்டு இருக்கும்போதே வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தினர். நான் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து புகார் அளித்தேன். என் அம்மாவின் போனை பிடிடுங்கி என்னிடம் வீடியோ கால் பேசினர்.