savukku shankar : பிரபல யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தவறான தகவல்களை பரப்பியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

savukku shankar : சவுக்கு சங்கர் தனது யூடியூப் சேனல் மூலம் தவறான தகவல்களை பரப்பியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தவறான தகவல்களை பரப்பியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டு கைதுக்கு உத்தரவாதம் அளிக்காது என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் நில மோசடி தொடர்பாக தனது யூ டியூப் சேனலில் தவறான தகவல் பரப்புவதாக சென்னை மத்திய குற்றப்பிரிவின் நில மோசடி பிரிவு இன்ஸ்பெக்டர் சிவ சுப்ரமணியன் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் சவுக்கு சங்கர் மீது பாரதிய நியாய சன்ஹீதா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
