Savukku Shankar: ’கண்ணத்தில் அறைந்து கையை முறுக்கினர்! பெண் காவலர்கள் மீது யூடியூபர் சவுக்கு சங்கர் புகார்!
Savukku Shankar: பெண் காவலர்கள் தன்னை வேனில் வைத்து அடித்து மன்னிப்பு கேட்க சொல்லி வீடியோ எடுத்ததாகவும், இடது கையை முறுக்கியதாகவும் சவுக்கு சங்கர் கூறி உள்ளார்.

’கண்ணத்தில் அறைந்து கையை முறுக்கினர்! பெண் காவலர்கள் மீது யூடியூபர் சவுக்கு சங்கர் புகார்!
கண் கண்ணாடியை கழற்ற சொல்லி பெண் காவலர்கள் தாக்கியதாக சவுக்கு சங்கர் நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
திருச்சி அழைத்து செல்லப்பட்ட சவுக்கு சங்கர்
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் திருச்சி சைபர் கிரைம் காவலர்கள் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிர்ந்து இருந்த நிலையில். திருச்சி மாவட்டத்தில் உள்ள மூன்றாவது கூடுதல் உரிமையில் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயப்பிரதா முன்பு சவுக்கு சங்கர் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவரை மருத்துவ பரிசோதனை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
இன்று காலை கோவை மத்திய சிறையில் இருந்து பெண் காவலர்கள் பாதுகாப்பு உடன் திருச்சிக்கு அழைத்து வந்து உள்ளனர்.