’அண்ணாசாலையில் பிரம்மாண்ட மால்! அகற்றப்படுகிறதா மூப்பனார் சமாதி! செல்வபெருந்தகையின் மெகா ப்ளான்!’ சவுக்கு சங்கர் பேட்டி!
”மூப்பனார் சமாதி இந்த வணிக வளாக திட்டத்திற்கு தடையாக இருப்பதால், அதனை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் சவுக்கு சங்கர் தெரிவித்தார்”

’அண்ணாசாலையில் பிரம்மாண்ட மால்! அகற்றப்படுகிறதா மூப்பனார் சமாதி! செல்வபெருந்தகையின் மெகா ப்ளான்!’ சவுக்கு சங்கர் பேட்டி!
தனியார் வணிக வளாகம் கட்டுவதற்காக சென்னை அண்ணாசாலைக்கு அருகே உள்ள மூப்பனார் சமாதி அகற்றப்பட உள்ளதாக பத்திரிகையாளரும், யூடியூபருமான சவுக்கு சங்கர் குற்றம்சாட்டி உள்ளார்.
சவுக்கு சங்கர் தனது யூடியூப் பேட்டியில், சென்னை அண்ணாசாலை பகுதியில் உள்ள "காங்கிரஸ் மைதானத்தில்" அமைந்த "ஜி.கே. மூப்பனார்" சமாதியை அகற்றுவதற்கு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை சென்னை மாநகராட்சிக்கு மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளார். இந்த முடிவு, கட்சிக்கு சொந்தமான "100 கிரவுண்டு" நிலத்தை 99 ஆண்டு குத்தகைக்கு விடுவதற்கும், "டி.எல்.எஃப்" (DLF) நிறுவனத்துடன் இணைந்து வணிக வளாகம் கட்டுவதற்கும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.