Savukku Shankar: ‘நீதிபதி போட்ட உத்தரவு.. மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட சவுக்கு சங்கர்’ நடந்தது என்ன?
நிர்வாக காரணங்களுக்காக யூடியுபர் சவுக்கு சங்கரின் பிரதான வழக்கு விசாரணையை மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு இரண்டாவது சிறப்பு நீதிமன்ற நீதிபதி அல்லி அமர்வுக்கு மாற்றம் செய்தார்.

யூடியுபர் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையை ஜனவரி 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் நீதிபதி செங்கமல செல்வன் உத்தரவிட்டார். நிர்வாக காரணங்களுக்காக யூடியுபர் சவுக்கு சங்கரின் பிரதான வழக்கு விசாரணையை மதுரை மாவட்ட போதை பொருள் தடுப்பு இரண்டாவது சிறப்பு நீதிமன்ற நீதிபதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. சவுக்கு சங்கர் தரப்பில் பிடிவாரண்ட்டை ரத்து செய்து ஜாமின் கோரிய விசாரணையில் மாலை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதி அறிவிப்பு.
சவுக்கு சங்கர் வழக்கு விபரம்
பிரபல யூடியுபர் சவுக்குசங்கர் தேனி மாவட்டத்தில் தங்கியிருந்தபோது தனது அறையில் கஞ்சா வைத்திருந்ததாக PC பட்டி காவல்துறை தரப்பில் பதிவு செய்யப்பட்ட வழக்கானது மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது.
இதனிடையே பல்வேறு வழக்குகளில் சிறையில் இருந்த சவுக்குசங்கர் சமீபத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுபடி ஜாமீனில் உள்ளார். இந்த நிலையில் சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையானது நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பு விசாரணைக்கு வந்தபோது சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் சவுக்கு சங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.
