’திராவிட மாப்பிள்ளை உடன் கூட்டணி பேச்சு! மாமல்லபுரம் மாநாட்டின் மெகா பிளான்!’ அன்புமணியை சாடும் சவுக்கு சங்கர்!
"பாமக தனித்து போட்டியிட முடியாது என்பதை உணர்ந்து, தங்கள் செல்வாக்கை காட்ட இந்த மாநாட்டை நடத்தியது"

’திராவிட மாப்பிள்ளை உடன் கூட்டணி பேச்சு! மாமல்லபுரம் மாநாட்டின் மெகா பிளான்!’ அன்புமணியை சாடும் சவுக்கு சங்கர்!
வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக உடன் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக யூடியூபரும், பத்திரிகையாளருமான சவுக்கு சங்கர் குற்றம்சாட்டி உள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், 2026 தேர்தலை முன்னிட்டு திருவிடந்தையில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்த மாநாடு, பாமகவின் அரசியல் செல்வாக்கை வெளிப்படுத்துவதற்கும், திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வலு சேர்ப்பதற்கும் நடத்தப்படுவதாக யூடியூபர் மற்றும் பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தனது நேர்காணலில் தெரிவித்துள்ளார்.