Savukku Shankar: ‘சவுக்கு சங்கர் வெளியே வர எத்தனை நாள் ஆகும்?’ ஜாமினில் உள்ள பின்னடைவு என்ன?’ வழக்கறிஞர் விளக்கம்!
Savukku Shankar: ‘‘உங்களுக்கு இது தான் வேலையா? இவர் ஒருவர் தான் இருக்கிறாரா? சட்டம் ஒழுங்கு வேலையை பார்க்க மாட்டீர்களா? ’ என்று போலீசாரை நோக்கி நீதிபதி கேள்வி எழுப்பினார்’’

Savukku Shankar: புழல் சிறையில் இருக்கும் சவுக்கு சங்கருக்கு எப்போது ஜாமின் கிடைக்கும்? அவரது ஜாமினில் இருக்கும் சிக்கல் என்ன? என்று அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன், ரெட்பிக்ஸ் யூடியூப் சேனலில் பேட்டியளித்துள்ளார். இதோ அந்த பேட்டி:
‘‘சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு, டிசம்பர் 18 ம் தேதி அதிகாலை 1:45 மணிக்கு, அவரது தாயாருக்கு ஒரு மெஜேஜ் வந்துள்ளது. முதல் நாள் இரவு 11:10 மணிக்கு சவுக்கு சங்கரை கைது செய்திருப்பதாக, தேனி பழனிச்செட்டி பட்டி போலீஸ் அந்த மெஜேஜ் அனுப்பியிருந்தது. முதல் நாள் அவரை, பகல் 1 மணிக்கு தேனாம்பேட்டை போலீஸ் அழைத்துச் செல்கிறது. இரவு 11 மணி வரை, அவரை ஸ்டேஷனில் வைத்திருக்கிறார். எந்த வாரண்டும் இல்லாமல், விளக்கமும் இல்லாமல் அவரை எப்படி அழைத்துச் செல்ல முடியும்? இது சட்டவிரோதமான நடவடிக்கை.
சவுக்கு வழக்கில் இரண்டாவது இன்னிங்ஸ்
போலீஸ் கட்டுப்பாட்டில் இந்த மாநிலம் இருக்கிறது. யாருமே கேள்வி கேட்க முடியாது, வழக்கறிஞர்கள் சந்திக்க முடியாது, உறவினர்கள் சந்திக்க முடியாது, எந்த தொடர்புகளும் கிடையாது. ஒரு குடிமகனை 9 மணி நேரம், சட்டவிரோத காவலில் வைக்கிறார்கள். இவை கேள்வி கேட்க வேண்டிய யாருமே, கேள்வி கேட்கவில்லை. 18 ம் தேதி சவுக்கு சங்கரை மதுரை கொண்டு செல்கின்றனர். அதன் பின், இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்குகிறது.
