Sankaraiah: ’சுதந்திர போரட்ட தியாகி! காம்ரேட்! தகைசால் தமிழர்’ யார் இந்த சங்கரய்யா?
”RIP Sankaraiah: 8 ஆண்டுகால சிறை வாழ்க்கைக்கு பிறகு 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகுதான் விடுதலை செய்யப்பட்டார்”

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான சங்கரய்யா அவர்கள் இன்று காலை 9.30 மணி அளவில் காலாமானர்.
விடுதலை போராட்ட வீரர், தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியை தொடங்கியவர்களில் ஒருவர் உள்ளிட்ட பல்வேறு புகழுக்கு சொந்தக்காரரான சங்கரய்யா தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையிலும் மக்கள் பணி ஆற்றி உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோயில்பட்டியில் 1921ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்த சங்கராய்யா, இளம் வயதிலேயே இந்தியாவில் பரவிக்கொண்டிருந்த பொதுவுடமை கொள்கைகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். மதுரை அமெரிக்கன்கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது மாணவர் மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட அவர், இந்திய விடுதலை போராட்டத்தில் கலந்து கொண்டு பிரிட்டீஷ் அரசை எதிர்த்து போராட தொடங்கினார். இதனால் 1941ஆம் ஆண்டில் கல்லூரி இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும்போதே ஆங்கிலேயே அரசால் சங்கரய்யா கைது செய்யப்பட்டார்.
