ரூ.3 கோடி சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு ரத்து!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ரூ.3 கோடி சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு ரத்து!

ரூ.3 கோடி சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு ரத்து!

Suguna Devi P HT Tamil
Published Apr 25, 2025 01:08 PM IST

தமிழ்நாட்டின் வேளாண் துறை அமைச்சராக இருந்து வரும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் அவர் மனைவி, மகன் மீது தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அவர்களை விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

ரூ.3 கோடி சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு ரத்து!
ரூ.3 கோடி சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு ரத்து!

இவ்வாறு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. தற்போது கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

சிக்கலில் அமைச்சர்

முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யக் கூறி உச்சநீதிமன்றம் தெரிவிது இருந்தது. இப்போது இவருக்கும் அதே சிக்கல் வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அமிச்சர் பதவிக்கு ஆபத்து வருமா என்று அவரது தரப்பினர் கவலையில் உள்ளனர்.

சொத்துக் குவிப்பு வழக்கு

கடந்த 2006-2011 ஆம் ஆண்டுகளில் நடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக 3 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து இருந்தது. இது தொடர்பாக கடலூர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது. மேலும் இந்த வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்பட 3 பேரையும் விடுவித்து உத்தரவு பிறப்பித்து இருந்தது.

லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் இந்த ரத்தினை மறு பரீசீலனை செய்யக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. தற்போது இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்ததை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில், வழக்கில் முதல் தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிக்கையை கூறி சாதகமான வாதங்கள் வைக்கப்பட்டது.

இதற்கு எதிராக வாதாடிய அமைச்சர் தரப்பு வழக்கறிஞர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தரப்பில், குடும்ப சொத்துக்களையும், அறக்கட்டளை சொத்துக்களையும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் என்று லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம் சாட்டியுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சரி என்றும் வாதிடப்பட்டது.

இந்த இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி லமறு ஆய்வு மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி வேல்முருகன், அமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்து கடலூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், அமைச்சர் உள்ளிட்டோருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை பதிவு செய்து ஆறு மாதங்களில் விசாரணையை முடிக்கும்படி, கடலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.

Suguna Devi P

TwittereMail
சுகுணா தேவி பி, கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். அச்சு ஊடகம், மொழிபெயர்ப்பு துறை மற்றும் டிஜிட்டல் ஊடகம் என 5 + ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தேசம், லைப்ஸ்டைல் சர்வதேசம், சினிமா உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் ஆங்கில இலக்கியத் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றுள்ள இவர், விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் 2018-2019 ஆம் ஆண்டு பணியாற்றியுள்ளார். மேலும் ஈடிவி பாரத் தமிழ், தமிழ்நாடு அரசு நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான இதழ் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2024 செப்டம்பர் மாதம் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.