Durai Murugan Vs ED Raid: அமைச்சர் துரைமுருகன் தொடர்புடைய இடங்களில் 14 கோடி பறிமுதல்! அமலாக்கத்துறை தகவல்!
அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் இருந்து 13.7 கோடி ரொக்கமும், கதிர் ஆனந்த் லாக்கரில் இருந்து 75 லட்சம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.

அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் இருந்து 13.7 கோடி ரொக்கமும், கதிர் ஆனந்த் லாக்கரில் இருந்து 75 லட்சம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.
அமலாக்கத்துறை சோதனை!
கடந்த ஜனவரி 03ஆம் தேதி அன்று வேலூர் மாவட்டம், காட்பாடி, காந்தி நகரில் உள்ள திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இல்லம், வேலூர் எம்.பி கதிர் ஆனந்திற்கு தொடர்பு உடைய கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி, திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசனின் இல்லம் ஆகிய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனை 3 நாட்கள் வரை நீண்டது. 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது அமைச்சர் துரைமுருகன் மற்றும் கதிர் ஆனந்திற்கு தொடர்புடைய நபர்களுக்கு சொந்தமான இடங்களில் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அமலாக்கத்துறை சோதனை நடப்பதாக அப்போது கூறப்பட்டது.
துரைமுருகன் சொன்னது என்ன?
அன்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், ரெய்டு குறித்த கேள்விக்கு, “இந்த விஷயத்தில் உங்களுக்கு எவ்வளவு தெரியுமோ அதுதான் எனக்கும் தெரியும். என் வீட்டுக்கு வந்தது யார் என்று தெரியவில்லை. எனது வீட்டில் யாருமே கிடையாது. 2 வேலைக்காரர்கள்தான் அங்கு உள்ளார்கள். அங்கு உள்ளவர்கள் எந்த டிப்பார்ட்மண்டில் இருந்து வந்தார்கள் என்று தெரியாது” என கூறி இருந்தார்.