2036 வரை திமுக ஆட்சியா? ’ஆசை இருக்கலாம்; பேராசை இருக்க கூடாது!’ ஸ்டாலினை கலாய்க்கும் ஆர்.பி.உதயகுமார்!
”2026, 2031, மற்றும் 2036 ஆண்டுகளில் திமுக ஆட்சி தொடர வேண்டும் என்ற ஸ்டாலினின் கனவு, அவரது குடும்பத்தின் தொழில் வளர்ச்சிக்காகவே என்று அவர் குற்றம்சாட்டினார்”

2036 வரை திமுக ஆட்சியா? ’ஆசை இருக்கலாம்; பேராசை இருக்க கூடாது!’ ஸ்டாலினை கலாய்க்கும் ஆர்.பி.உதயகுமார்!
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் திமுக ஆட்சி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, தமிழகத்தில் அடுத்த 15 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சி தொடரும் என்ற ஸ்டாலினின் கூற்றை விமர்சித்தார்.
பேராசையால் பெரு நஷ்டம்
ஆர்.பி. உதயகுமார், ஸ்டாலினின் "அடுத்த 15 ஆண்டுகளுக்கு திமுக ஆட்சி" என்ற கூற்றை குறிப்பிட்டு, "மனிதனுக்கு ஆசை இருக்கலாம், ஆனால் பேராசை இருக்கக் கூடாது. பேராசை பெரு நஷ்டம் என்று கிராமத்து குழந்தைகளுக்குக் கூட தெரியும். ஆனால், இந்த பழமொழி ஸ்டாலினுக்கு தெரியவில்லை," என்று கிண்டலடித்தார். 2026, 2031, மற்றும் 2036 ஆண்டுகளில் திமுக ஆட்சி தொடர வேண்டும் என்ற ஸ்டாலினின் கனவு, அவரது குடும்பத்தின் தொழில் வளர்ச்சிக்காகவே என்று அவர் குற்றம்சாட்டினார்.