Rain Alert: ‘புயல் வரும்! மழை வெளுக்கும்! அடுத்த 4 நாளுக்கு ரெடியாடுங்க மக்களே!’
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Rain Alert: ‘புயல் வரும்! மழை வெளுக்கும்! அடுத்த 4 நாளுக்கு ரெடியாடுங்க மக்களே!’

Rain Alert: ‘புயல் வரும்! மழை வெளுக்கும்! அடுத்த 4 நாளுக்கு ரெடியாடுங்க மக்களே!’

Kathiravan V HT Tamil
Published Nov 30, 2023 09:33 AM IST

”Rain Alert:அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 26 செ.மீ மழை பதிவாகி உள்ளது. ஆவடியில் 19 செ.மீ, கொளத்தூரில் 15 செ.மீ, திருவிக நகரில் 15.4 செ.மீ., அம்பத்தூரில் 14 செ.மீ., மலர் காலனியில் 13 செ.மீ மழை பதிவாகி உள்ளது”

கனமழை எச்சரிக்கை
கனமழை எச்சரிக்கை

இதன் கடலோரத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த நான்கு நாட்களுக்கு சில இடங்களில் கனமழையும், பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை முதல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்தது. அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 26 செ.மீ மழை பதிவாகி உள்ளது. ஆவடியில் 19 செ.மீ, கொளத்தூரில் 15 செ.மீ, திருவிக நகரில் 15.4 செ.மீ., அம்பத்தூரில் 14 செ.மீ., மலர் காலனியில் 13 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று காலை 8 மணி முதல் திறக்கப்படும் நீரின் அளவு 6ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. புழல் ஏரியில் திறக்கப்படும் நீரின் அளவு ஆயிரம் கன அடியில் இருந்து இரண்டாயிரம் கன அடியாக திறக்கப்பட்டுள்ளது.

Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.