Rain Warning: ’சென்னை முதல் நாகை வரை! 14 மாவட்டங்களில் 1 மணி வரை மழை’ சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Rain Warning: ’சென்னை முதல் நாகை வரை! 14 மாவட்டங்களில் 1 மணி வரை மழை’ சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Rain Warning: ’சென்னை முதல் நாகை வரை! 14 மாவட்டங்களில் 1 மணி வரை மழை’ சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Kathiravan V HT Tamil
Dec 11, 2024 10:20 AM IST

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்றைய தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று உள்ளது

’சென்னை முதல் நாகை வரை! 14 மாவட்டங்களில் 1 மணி வரை மழை’ சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
’சென்னை முதல் நாகை வரை! 14 மாவட்டங்களில் 1 மணி வரை மழை’ சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தஞ்சாவூர், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

மேலும் திருவள்ளூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்றைய தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு- வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை தமிழக கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என நேற்றைய தினம் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருந்தது. 

17 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை

இதன் காரணமாக இன்றைய தினம் தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர். மயிலாடுதுறை, நாகப்பட்டினம். தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழை, சிவகங்கை, ராமநாதபுரம். திருச்சிராப்பள்ளி பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை. திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாயப்புள்ளது என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் நேற்றைய தினம் கூறி இருந்தது. 

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.