Puducherry: ’நான் கோப்பில் கையெழுத்திடாலும் வேலை நடப்பது இல்லை! கேள்வி வருகிறது’ ஆளுநர் முன் புதுச்சேரி முதல்வர் வேதனை!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Puducherry: ’நான் கோப்பில் கையெழுத்திடாலும் வேலை நடப்பது இல்லை! கேள்வி வருகிறது’ ஆளுநர் முன் புதுச்சேரி முதல்வர் வேதனை!

Puducherry: ’நான் கோப்பில் கையெழுத்திடாலும் வேலை நடப்பது இல்லை! கேள்வி வருகிறது’ ஆளுநர் முன் புதுச்சேரி முதல்வர் வேதனை!

Kathiravan V HT Tamil
Published Mar 01, 2025 12:16 PM IST

செவிலியர்கள் அழுகிறார்கள். இது தொடர்பாக கோப்புக்கு தேவையில்லாமல் கேள்வி. இதை துறை அமைச்சராக இருந்து சொல்கிறேன் என்றால் எனக்கு எவ்வளவு சங்கடம் இருக்கும். சிலவற்றை கண்டிப்பாக செய்ய வேண்டும். முதல்வராக இருக்கும் நானே அனுமதி கொடுக்கும்போது, நிர்வாகத்தில் ஏன் இது பெரிய குறையாக உள்ளது என்று தெரியவில்லை.

Puducherry: ’நான் கோப்பில் கையெழுத்திடாலும் வேலை நடப்பது இல்லை! கேள்வி வருகிறது’ ஆளுநர் முன் புதுச்சேரி முதல்வர் வேதனை!
Puducherry: ’நான் கோப்பில் கையெழுத்திடாலும் வேலை நடப்பது இல்லை! கேள்வி வருகிறது’ ஆளுநர் முன் புதுச்சேரி முதல்வர் வேதனை!

'மாபெரும் சுகாதாரத் திருவிழா'

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு புதுச்சேரி அரசு, சுகாதார மற்றும் குடும்ப நலவழித்துறை சார்பாக 'மாபெரும் சுகாதாரத் திருவிழா' புதுச்சேரி, கருவடிக்குப்பம், சிவாஜி சிலை அருகில் உள்ள காமராஜர் மணி மண்டபத்தில் 2 நாள் விழா தொடங்கியது. இன்று நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு மாபெரும் சுகாதாரத் திருவிழாவினைக் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். 

இதனை தொடர்ந்து, டெங்கு காய்ச்சலை எதிர்த்துப் போராடுவதற்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அதிகாரமளிக்கும் விரிவான திட்டமான “டிரீம்ஸ் 24 - பள்ளிகளில் கல்வி, விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு 2024" (Dengue Reduction by Education, Awareness & Monitoring in Schools – Dreams ’24) மூலம் டெங்குவைக் குறைக்கும் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்த உறுதுணையாக இருந்த அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வ தூதுவர்களுக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ மாணவியருக்கும் துணைநிலை ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ஆகியோர்‌ சான்றிதழ்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் சபாநாயகர் அமைச்சர்கள், துறை அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

இச்சுகாதார திருவிழாவில் பொது சுகாதார சேவைகள், வாய், மார்பக, கர்ப்பவாய் புற்றுநோய் பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள், நீரிழிவு (சர்க்கரை), ரத்த அழுத்தம், இரத்த பரிசோதனைகள், கண், காது, மூக்கு, தொண்டை, மனநலம் மற்றும் குழந்தைகளுக்கான ஆலோசனைகள், இருதயம், நுரையீரல், நரம்பியல், சிறுநீரக நோய்க்கான பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள், அந்தந்த துறை சார்ந்த சிறப்பு வல்லுனர்களால் இலவசமாக வழங்கப்பட இருக்கின்றன. மேலும் சுகாதார கண்காட்சி, ஆயுஷ் மற்றும் யோகா உடற்பயிற்சி முறைகள், ஆரோக்கிய உணவு திருவிழா போன்றவை இத்திருவிழாவில் இடம் பெற இருக்கின்றன.

சிறப்பு மருத்துவர்கள் இங்கு இருக்க வேண்டும் 

இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் என்.ரங்கசாமி, புதுச்சேரி மக்களுக்கு எளிதாக மருத்துவ வசதியை கொடுத்து கொண்டிருக்கிறோம். மற்ற மாநிலங்களில் 10 ஆயிரம் பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருந்தால், புதுச்சேரியில் 4 ஆயிரம் பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தை வைத்துள்ளோம். அனைத்து கிராமங்களிலும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. அதனால்தான் மருத்துவ வசதிக்கான குறியீட்டில் நாம் முதன்மை நிலையில் உள்ளோம். இருப்பினும், இது போதாது. சென்னைக்கு செல்லாமல் நம்முடைய மக்களுக்கு புதுச்சேரியிலேயே சிறப்பு மருத்துவ வசதி கிடைக்கும் நிலையை உருவாக்க வேண்டும். சிறப்பு மருத்துவமனைகள் இங்கு வர வேண்டும். சிறப்பு மருத்துவர்கள் இருக்க வேண்டும். சென்னைக்கு சென்று சிறப்பு மருத்துவம் கொடுத்தால்தான் சரியாகும் என்ற நினைப்பு மக்களிடம் உள்ளது. இது சரி என கூற முடியாது.

முதியோர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது 

புதுச்சேரியிலேயே சிறப்பான மருத்துவ சேவையை மருத்துவர்கள் கொடுத்து கொண்டிருக்கிறார்கள். அறுவை சிகிச்சை, இருதய அறுவை சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என நம்மிடம் சிறந்த மருத்துவர்கள் உள்ளனர். 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெற மருத்துவ காப்பீடு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது முதியோர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. உடல் பருமன் பெரும் பிரச்னையாக இருப்பதாகவும், உடல் பருமனை குறைக்க உடற்பயிற்சி செய்ய வேண்டும் என பிரதமர் அண்மையில் கூறியிருந்தார்.

மேலும் படிக்க:- டாப் 10 தமிழ் நியூஸ்: வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு! முதலமைச்சருக்கு பிறந்தநாள் பிரதமர் வாழ்த்து

காசநோய் இல்லாத புதுச்சேரி 

புதுச்சேரி ஆரம்ப சுகாதார நிலையங்களில் யோகா கற்றவர்கள் உடல் பருமனை குறைக்க ஆலோசனை வழங்கி வருகிறார்கள். உடல் பருவமனை குறைக்க வேண்டும், சர்க்கரை நோய் வராமல் வர வேண்டும். இதுபோன்ற ஆலோசனைகளை பெற்று ஆரம்பித்திலேயே அதனை கட்டுப்படுத்தும் போது நாம் ஆரோக்கியமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ள முடியும். காசநோய் பெரிய பிரச்னையாக இருந்தது. இப்போது வீடு வீடாக சென்று பரிசோதனை செய்து, காசநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து மருந்து கொடுக்கப்படுகிறது. காசநோய் இல்லாத புதுச்சேரியை கொண்டுவர வேண்டும் என்பது நம்முடைய எண்ணம். இந்த எண்ணம் 2, 3 ஆண்டுகளில் நிறைவேறி விடுவோம்.

வாரத்தில் 3 நாட்கள் முட்டை 

அதேபோல், இருதய பரிசோதனையையும், வீடு வீடாக சென்று செய்யப்பட்டு வருகிறது. ரத்த சோகை நோய் இல்லாமல் பார்க்கவும் அரசு வாய்ப்பு உருவாக்கி உள்ளது. புதுச்சேரி மக்கள் ஊட்டச்சத்து மூலம் நல்ல ஆரோக்கியமாக வாழும் நிலையை அரசு உருவாக்கி உள்ளது. பள்ளிகளில் மாணவர்களுக்கு மாலையில் சிறுதானிய பிஸ்கட் கொடுக்கப்படுகிறது. சைவ சாப்பாடு போடுகிறார்கள், முட்டை போடுவில்லை என்ற குறை இருந்தது. இப்போது வாரத்தில் மூன்று நாட்கள் முட்டை போடப்படுகிறது. நல்ல சுகாதார வசதி மிக முக்கியமான ஒன்று. மகிழ்ச்சியோடு வாழ உடல்நிலை சரியாக இருக்க வேண்டும். அதற்கான சுகாதார வசதி நன்றாக இருக்க வேண்டும்.

தொழில் நுட்ப வல்லுநர்கள் வேண்டும் 

புதுச்சேரியில் ஆயுர்வேதா, சித்தா என மக்கள் விரும்பும் மருத்துவ சிகிச்சைகளும் அறிமுகப்படுத்தி உள்ளோம். மக்களுக்கு நல்ல சுகாதார வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். இன்னும் சுகாதாரமாக இருக்க வேண்டும் என்பது அரசின் எண்ணம். தெருக்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கொசுத்தொல்லைகள் இல்லாமல் இருக்க வேண்டும். சுத்தமாக இருந்தால் கொசு தொல்லை இல்லாமல் இருக்கலாம். இதற்காக உள்ளாட்சி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

காரைக்காலில் மருத்துவ வசதியில் பெரிய குறை இருந்தது. தற்போது காரைக்காலில் ஜிப்மர் மருத்துவமனை கிளை தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது. காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு அனைத்து மருத்துவ வசதிகளை வசதிகளை கொண்டுவர அரசு திட்டமிட்டுள்ளது. அங்கு எம்ஆர்ஐ ஸ்கேன் வாங்கப்பட்டுள்ளது. இவை எல்லாம் இருந்தாலும் எனக்கு பெரிய குறை உள்ளது. தேவையான மருத்துவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் நியமிக்கப்படவில்லை. ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்களை தான் நியமித்துள்ளோம். ரூ.11 கோடியில் எம்ஆர்ஐ ஸ்கேன் வாங்கி விட்டோம். இதற்கு தொழில்நுட்ப வல்லுநர்கள் வேண்டும்.

மேலும் படிக்க:- தங்கம் விலை நிலவரம்: 4ஆவது நாளாக சரிந்த தங்கம் விலை! சவரன் எவ்வளவு தெரியுமா? இதுதான் வாய்ப்பு!

கோப்பு சுற்றி வருவதாக கதை சொல்ல கூடாது 

நிர்வாகத்தில் பெரிய குறை உள்ளது என்பதை வெளிப்படையாக சொல்லும் நிலையில் உள்ளேன். நிர்வாகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும். கோப்பு சுற்றிக்கொண்டு வருவதாக கதை சொல்லும் வேலை இருக்கக்கூடாது. சுகாதாரத்துறையில் போதிய பணியாளர்கள் இருக்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்பி விட்டால் புதுச்சேரியில் குறை சொல்லும் வாய்ப்பே இல்லை. ஒப்பந்த அடிப்படையில் 20 ஆண்டு பணியாற்றும் மருத்துவர்களுக்கான விதிகளை தளர்த்தி பணி நிரந்தரம் செய்தால் அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். ரூ.3 கோடி செலவு செய்து படித்துவிட்டு பணிக்கு வரும் சிறப்பு மருத்துவ நிபுணர்களுக்கு ரூ.1 லட்சம் ஊதியம் கொடுப்பதால் உடனே அவர்கள் தனியாரில் பணியாற்ற சென்று விடுகிறார்கள். எனவே அவர்களை பணி நிரந்தரம் செய்வது, ஊதியத்தை உயர்த்தி வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.

நிர்வாகத்தில் சங்கடங்கள் உள்ளது 

நிர்வாகத்தில் நமக்கு சில சங்கடங்கள் இருக்கிறது. இருந்தாலும், எதை எல்லாம் செய்ய முடியுமோ, அதையெல்லாம் விரைவாக செய்து துறையில் உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். 500 செவிலியர் பணி செய்ய வேண்டிய இடத்தில் 140 பேர் பணியாற்றுகிறார்கள். இதனால் செவிலியர்கள் அழுகிறார்கள். இது தொடர்பாக கோப்புக்கு தேவையில்லாமல் கேள்வி. இதை துறை அமைச்சராக இருந்து சொல்கிறேன் என்றால் எனக்கு எவ்வளவு சங்கடம் இருக்கும். சிலவற்றை கண்டிப்பாக செய்ய வேண்டும். முதல்வராக இருக்கும் நானே அனுமதி கொடுக்கும்போது, நிர்வாகத்தில் ஏன் இது பெரிய குறையாக உள்ளது என்று தெரியவில்லை. பலவற்றை நாம் செய்து வருகிறோம். குறைகளும் நிவர்த்தி செய்யப்படும். மற்ற மாநிலங்களை காட்டிலும் நாம் அதிகமாக செய்கிறோம். சுகாதார பணியாளர்கள் கவலையின்றி பணிகளை தொடர்ந்து செய்து மக்களின் பாராட்டை பெற வேண்டும். அடுத்த ஆண்டு மடுகரை, நெட்டப்பாக்கம், கரிக்கலாம்பாக்கம் போன்ற கிராமத்தில் சுகாதார திருவிழா நடத்தப்படும் என கூறினார்.