நான்குவழிச் சாலை அமைக்காமல் சுங்கச்சாவடி அமைப்பதா?.. திண்டுக்கல் அருகே வெகுண்டெழுந்து அடித்து நொறுக்கிய பொதுமக்கள்!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  நான்குவழிச் சாலை அமைக்காமல் சுங்கச்சாவடி அமைப்பதா?.. திண்டுக்கல் அருகே வெகுண்டெழுந்து அடித்து நொறுக்கிய பொதுமக்கள்!

நான்குவழிச் சாலை அமைக்காமல் சுங்கச்சாவடி அமைப்பதா?.. திண்டுக்கல் அருகே வெகுண்டெழுந்து அடித்து நொறுக்கிய பொதுமக்கள்!

Karthikeyan S HT Tamil
Published Mar 12, 2025 12:31 PM IST

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று திறக்கபட இருந்த சுங்கச்சாவடியை பொதுமக்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நான்குவழிச் சாலை அமைக்காமல் சுங்கச்சாவடி அமைப்பதா?.. திண்டுக்கல் அருகே வெகுண்டெழுந்து அடித்து நொறுக்கிய பொதுமக்கள்!
நான்குவழிச் சாலை அமைக்காமல் சுங்கச்சாவடி அமைப்பதா?.. திண்டுக்கல் அருகே வெகுண்டெழுந்து அடித்து நொறுக்கிய பொதுமக்கள்!

இந்நிலையில் இந்த இரு வழி சாலையில் வத்தலக்குண்டு அருகே லட்சுமிபுரம் என்ற இடத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது. ஆனால், நான்கு வழிச் சாலைப் பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல் சுங்கச்சாவடியை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு அந்தப் பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இதற்கிடையே, இன்று (மார்ச் 12) காலை சுங்கச்சாவடியை திறப்பதற்கு சுங்கசாவடி நிர்வாகம் ஏற்பாடுகளை செய்திருந்தது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து திடீரென சுங்கச் சாவடியை அடித்து நொறுக்கினர். சுங்கச்சாவடியில் இருந்த அனைத்து உபகரணங்களும் உடைத்து சேதப்படுத்தப்பட்டன. இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் நிலவியது.

இதையடுத்து சுங்கச்சாவடி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள், பெண்கள் மற்றும் ஏராளமானோர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த முற்றுகை போராட்டத்தில் கலந்துகொள்ள அப்பகுதி திமுகவினரும் குவிந்து வருவதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் வத்தலகுண்டு - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு நிலவி வருகிறது.

Karthikeyan S

TwittereMail
சு.கார்த்திகேயன், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்தவர். மதுரை காமராஜர் பல்கலை கழகத்தில் முதுகலை மின்னணு ஊடகம் மற்றும் தொடர்பியல் துறையில் பட்டம் பெற்றவர். 2011 ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். கல்வி வானொலி ஞானவாணி பண்பலை, ஈ நாடு டிஜிட்டல், ஒன் இந்தியா, டாப் தமிழ் நியூஸ், டைம்ஸ் நவ் நிறுவனங்களைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட இவர், அரசியல், அன்றாட நிகழ்வுகள், தமிழ்நாடு, தேசம், சர்வதேசம், ஆன்மிகம் மற்றும் யூடியூப் வீடியோ உள்ளிட்ட அனைத்து பிரிவுகளில் செய்திகளை வழங்கி வருகிறார்.
Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.