பழவேற்காடு பறவைகள் சரணாலயம் அருகே இறால் பண்ணைகள்; சமூக செயற்பாட்டாளர்கள் வருத்தம்!
தங்கல் பெரும்புலத்தில் 700 கால்நடைகளை மேய்க்கும் பெண்கள் பொதுப்பாதைகளில் இறால் பண்ணைகள் சட்ட விரோதமாக இருப்பது தங்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாக குற்றம் சாட்டுகின்றனர்.

பழவேற்காடு பறவைகள் சரணாலயம் அருகே இறால் பண்ணைகள்; சமூக செயற்பாட்டாளர்கள் வருத்தம்!
பழவேற்காடு பறவைகள் சரணாலயம் அருகே சட்ட விரோதமாக செயல்படும் இறால் பண்ணைகளை கண்டுகொள்ளாத அரசுகள் என்று சமூக செயற்பாட்டாளர்கள் வருத்தப்படுகிறார்கள்.
எண்ணூரைப் பாதுகாப்போம் அமைப்பினர், "Aquaculture land grab - இறால் பண்ணைகளின் சட்ட விரோத ஆக்கிரமிப்புகள்" என்ற தலைப்பில் செய்த ஆய்வில் 309 ஏக்கரில் இறால் பண்ணைகளை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து இருப்பதும், அதில் 62 ஏக்கரில் மேய்க்கால் மற்றும் கழுவேலி புறம்போக்கு பகுதியில் சட்ட விரோதமாக இயங்குவதாகவும் ஆதாரங்கள், புகைப்படங்களுடன் அறிக்கை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொன்னேரி தாலுகாவில் உள்ள தங்கல் பெரும்புலம் பகுதியில் அதிகளவில் தாழ்த்தப்பட்ட இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.