Power Shutdown Today: ஊஷார் மக்களே! ஈரோட்டில் இன்று இந்தப் பகுதிகளில் மின்தடை
தமிழகத்தில் இன்று (10.3.2023) மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட நாளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தமிழகத்தில் இன்று (10.3.2023) மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
ஈரோட்டில் ஈரோடு டவுன், சூரம்பட்ட நால்ரோடு, எஸ்.கே.சி.ரோடு, ஜகனாதபுரம் காலனி, என்ஜிஜிஓ காலனி, வீரப்பன்சத்திரம், இடயன்காட்டுவலசு, முனிசிபால்காலனி, டீச்சர்ஸ் காலனி, பெருந்துரை ரோடு, சம்பத்நகர், வெட்டுகட்டுவலசு ஆகிய பகுதிகளில் இன்று பராமரிப்பு காரணமாக பவர் கட் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, கோயம்புத்தூர், வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் திட்டமிடப்பட்ட மின்வெட்டு எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோட்டில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளதால் செல்போன், லேப்டாப் போன்ற மின்னணு சார்ந்த பொருட்களுக்கு சார்ஜ் செய்து வைத்துக் கொள்வது நல்லது.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்திருங்கள்.
டாபிக்ஸ்