Power Shut Down: இன்று எந்த மாவட்டங்களில் பவர் கட் தெரியுமா..!
TANGEDCO: மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட நாளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம்.
தமிழகத்தில் இன்று (07.03.2023) மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்
மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட நாளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை
சென்னையைப் பொறுத்தவரை இன்று திட்டமிடப்பட்ட மின் துண்டிப்பு எதுவும் மின்வாரியத்தால் குறிப்பிடப்படவில்லை. அதேநேரம், ஏதேனும் அவசர காலம் என்றால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட வாய்ப்புள்ளது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தின் திருவள்ளூர், கே.ஜி.கண்டிகை ஆகிய பகுதிகளில் இன்று பராமரிப்புப் பணிக்காக மின் தடை இருக்கும்.
கடலூர், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோபி, ஈரோடு, விருதுநகர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், விழுப்புரம், உடுமலைப்பேட்டை திருப்பூர், தூத்துக்குடி, திருச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் திட்டமிடப்பட்ட மின்வெட்டு எதுவும் இன்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மின்வெட்டு உள்ள பகுதிகளில் மட்டும், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருந்து பராமரிப்பு பணியின்போது மின்வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று மின்வாரியம் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்