Seeman: ’சீமானுக்கு பிரபாகரன் விருந்து வைத்தது உண்மை!’ தமிழீழ அரசியல்துறை அறிக்கை!
தமிழீழத் தேசியத் தலைவரோடு போதிய நேரத்தைச் செலவிட்டதோடு, திரு. செந்தமிழன் சீமான் அவர்களுக்கு வழமையான விருந்தோம்பல் நிகழ்வும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் விருந்து வைத்தது உண்மை என தமிழீழ அரசியல்துறை அறிக்கை வெளியிட்டு உள்ளது. இது தொடர்பான விவரங்களை நாம் தமிழர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் இடும்பாவனம் கார்த்திக் தனது ‘எக்ஸ்’ தள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
அதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. செந்தமிழன் சீமான் அவர்களின் தமிழீழப் பயணம் மற்றும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுடனான சந்திப்புத் தொடர்பான, உண்மைகளைத் தெளிவூட்டும் அறிக்கையொன்றை வெளியிட வேண்டிய அவசியம் அனைத்து நாடுகளில் இயங்கிவரும். தமிழீழ அரசியல்துறையினருக்கு ஏற்பட்டுள்ளது. இந்தப் பயணம் தொடர்பான உண்மைகளை, உரிய தருணத்தில் உறுதிப்படுத்த, நாம் தவறுவோமாயின் பேரெழுச்சியுடன் வளர்ந்து வரும் தமிழ்த்தேசியத்தைச் சிதைக்கக் கங்கணங்கட்டி நிற்கும். சில நாசகார சக்திகளின் சூழ்ச்சி வியூகக் கருத்தியல் மேலோங்கி, தமிழ்த்தேசியம் சிதைக்கப்படுவதை உலகெங்கும் வாழும் தமிழினச் செயற்பாட்டாளர்கள் எவரும் அனுமதிக்கமாட்டார்கள்.
துணிச்சலாக முன்னெடுத்து வருவதை பெருமிதம் கொள்கிறோம்!
2009 இல் தமிழீழத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பு யுத்தத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் தாயகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும், தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டம் சனநாயக அரசியல் போராட்டமாகப் பரிணமித்தது. இதனைத் தொடர்ந்து அன்னைத் தமிழ்நாட்டில் திரு. செந்தமிழன் சீமான் அவர்களும் தனது இனவேர்கள் விரிந்து நிற்கும் தமிழீழத்தில் ஏற்பட்ட தமிழின அழிப்பின் தாக்கம் ஏற்படுத்திய வடுக்களைத் தொடர்ந்து, கடத்த 15 ஆண்டுகளாக தமிழீழத் தேசியத் தலைவரை தனது தலைவராக ஏற்றுக்கொண்டு. தமிழ்த் தேசியத்தின் விடிவையும் தமிழ் மக்களின் விடுதலையை வாழ்வின் இலட்சியமாகவும் வரித்துக் கொண்டு, தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுக்கும். அரசியல்ப் போரை மிகவும் துணிச்சலாக முன்னெடுத்து வருவதையெண்ணி நாம் பெருமிதம் கொள்கிறோம்.