சலூன் ஊழியர் மீது கொலைவெறி தாக்குதல்: விசிக நிர்வாகி உள்ளிட்ட 2 பேர் கைது.. திருவண்ணாமலை போலீஸ் அதிரடி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  சலூன் ஊழியர் மீது கொலைவெறி தாக்குதல்: விசிக நிர்வாகி உள்ளிட்ட 2 பேர் கைது.. திருவண்ணாமலை போலீஸ் அதிரடி!

சலூன் ஊழியர் மீது கொலைவெறி தாக்குதல்: விசிக நிர்வாகி உள்ளிட்ட 2 பேர் கைது.. திருவண்ணாமலை போலீஸ் அதிரடி!

Stalin Navaneethakrishnan HT Tamil
Dec 19, 2024 09:54 AM IST

தொடர்ந்து தாக்குதலை சமாளிக்க முடியாத அருண்குமார் தனது கடைக்குள் புகுந்து தப்பிக்க முயற்சித்த போது, கடைக்குள் அத்துமீறி உள்ளே சென்று கொலை வெறி தாக்குதல் நடத்திய விசிகவின் அருண் மற்றும் கும்பல், சலூன் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்து அஜித் குமாரை சரமாரியாக தாக்கி அங்கிருந்து காரில் தப்பித்தனர்.

சலூன் ஊழியர் மீது கொலைவெறி தாக்குதல்: விசிக நிர்வாகி உள்ளிட்ட 2 பேர் கைது.. திருவண்ணாமலை போலீஸ் அதிரடி!
சலூன் ஊழியர் மீது கொலைவெறி தாக்குதல்: விசிக நிர்வாகி உள்ளிட்ட 2 பேர் கைது.. திருவண்ணாமலை போலீஸ் அதிரடி!

திருவண்ணாமலை வேங்கிக்கால் கிராமத்தில் லைம் ட்ரெண்ட்ஸ் என்கிற சலூன் செயல்பட்டு வருகிறது. அந்த கடையின் ஊழியர் அஜித் மற்றும் அவரது சக ஊழியர் ஆகியோர் கடந்த 17ஆம் தேதி இரவு பணி முடித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் கடையிலிருந்து புறப்பட்டுள்ளனர். 

நடந்த சம்பவம் என்ன?

அப்போது, வேலூர் சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு காரின் ஓட்டுனர் கவனக் குறைவாக பின்னோக்கி வந்து அவர்கள் வந்த பைக் மீது மோதியுள்ளார். இதனால், பைக்கில் வந்த சலூன் கடை ஊழியர்களுக்கும். காரில் இருந்த திருவண்ணாமலை விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர பொறுப்பாளர் ஆர்.கே.அருண்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, அருண்குமார் உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து அஜித்குமாரை சரமாரியாக தாக்கினர்.

தொடர்ந்து தாக்குதலை சமாளிக்க முடியாத அருண்குமார் தனது கடைக்குள் புகுந்து தப்பிக்க முயற்சித்த போது, கடைக்குள் அத்துமீறி உள்ளே சென்று கொலை வெறி தாக்குதல் நடத்திய விசிகவின் அருண் மற்றும் கும்பல், சலூன் ஊழியருக்கு கொலை மிரட்டல் விடுத்து அஜித் குமாரை சரமாரியாக தாக்கி அங்கிருந்து காரில் தப்பித்தனர்.

இதுகுறித்து சிசிடிவி காட்சிகள் பரபரப்பாகி வெளியான நிலையில் நேற்று சலூன் கடையின் உரிமையாளர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலை கிராமிய காவல் நிலைய போலீசார் சம்மந்தப்பட்டவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

அருண்குமாரை தூக்கிய போலீசார்

அருண்குமாரின் செல்போன் என்னை பயன்படுத்தி விசாரணை மேற்கொண்டதில் திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த சீட்டம்பட்டு கிராமத்தில் மறைந்திருப்பதாக தகவல் அறிந்தனர். உடனடியாக அங்கு விரைந்த தனிப்படை காவல்துறையினர் அருண்குமார் மற்றும் அவரது கூட்டாளியான நாகராஜ் ஆகியோரை கைது செய்ததுடன் அவர்கள் பயன்படுத்திய சொகுசு கார் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள திருவண்ணாமலை சேர்ந்த மாரி மற்றும் மணி ஆகியோரை போலீசார் தீவிரமாக தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். அதுமட்டுமின்றி இவர்கள் தப்பிக்க பல்வேறு விதத்தில் உதவிய 4 பேரை காவல் நிலையம் அழைத்து வந்து காவல் நிலையத்தில் வைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.