‘போக்கிரி விஜய்யாக மாறிய பாதுகாவலர்..’ விஜய் ரசிகர் தலைக்கு வந்த துப்பாக்கி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  ‘போக்கிரி விஜய்யாக மாறிய பாதுகாவலர்..’ விஜய் ரசிகர் தலைக்கு வந்த துப்பாக்கி!

‘போக்கிரி விஜய்யாக மாறிய பாதுகாவலர்..’ விஜய் ரசிகர் தலைக்கு வந்த துப்பாக்கி!

Stalin Navaneethakrishnan HT Tamil
Published May 05, 2025 08:14 PM IST

போக்கிரி படத்தில் ‘பொண்ணும் என்னோடது தான்.. ஃகன்னும் என்னோடது தான்’ என்று துப்பாக்கியை வைத்து விஜய் பேசும் டயலாக் போல, அவரது பாதுகாப்புக்கு வந்த பாதுகாவலரும் செயல்பட்ட சம்பவம், பேசுபொருளாகவும், வீடியோ வைரலாகவும் மாறிவிட்டது.

‘போக்கிரி விஜய்யாக மாறிய பாதுகாவலர்..’ விஜய் ரசிகர் தலைக்கு வந்த துப்பாக்கி!
‘போக்கிரி விஜய்யாக மாறிய பாதுகாவலர்..’ விஜய் ரசிகர் தலைக்கு வந்த துப்பாக்கி!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாண்டிக்குடி பகுதியில் ஜனநாயகன் மூன்று நாள் படப்பிடிப்பிற்காக தவெக தலைவர் விஜய் கடந்த ஒன்றாம் தேதி சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது மதுரை விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

விஜய் வருகையால் பரபரப்பான மதுரை

மதுரை விமான நிலையத்தில் காலை முதலே கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் விஜய்யின் வாகனங்களுக்கு முன்பாகவும் பின்னாலும் சென்று விஜய்க்கு மலர் தூவி வரவேற்றனர். தொடர்ந்து மூன்று நாள் கொடைக்கானலில் படப்பிடிப்பை முடித்துவிட்டு, தனி விமானத்தில் மீண்டும் சென்னை செல்வதற்காக இன்று மதியம் 12 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தார்.

தலையை நோக்கிச் சென்ற துப்பாக்கி

தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள், விஜய் அறிவுறுத்தலின் பெயரில் விமான நிலையத்திற்கு யாரும் வரவில்லை. வந்த சிலரும் விமான நிலையத்திற்குள் காவலர்கள் அனுமதி மறுத்ததால் திரும்பி சென்றனர். இதனையிடைல் மதுரை விமான நிலையத்திற்கு தவெக தலைவர் விஜய் வரும்போது திடீரென விஜய் பார்க்க வந்த தொண்டர் ஒருவரை தடுத்த விஜய்யின் பாதுகாவலர் ஒருவர், திடீரென துப்பாக்கியை எடுத்து, அந்த தொண்டரின் தலையை நோக்கி சுடுவதைப் போல செய்கை செய்தார். சிறிது நேரத்தில் அந்த தொண்டர் அதிர்ந்து போக, அவரை உடன் இருந்த பாதுகாவலர்கள் அழைத்துச் சென்றார்.

போக்கிரி படத்தில் ‘பொண்ணும் என்னோடது தான்.. ஃகன்னும் என்னோடது தான்’ என்று துப்பாக்கியை வைத்து விஜய் பேசும் டயலாக் போல, அவரது பாதுகாப்புக்கு வந்த பாதுகாவலரும் செயல்பட்ட சம்பவம், பேசுபொருளாகவும், வீடியோ வைரலாகவும் மாறிவிட்டது.

துப்பாக்கி வைத்தது எனக்குத் தெரியாது

இதற்கிடையில் விஜய்யின் பாதுகாவலர்களால் அச்சுறுத்தப்பட்ட அந்த நபர், நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான இன்பராஜ் என்பது தெரியவந்தது. மதுரையில் முதன்முறையாக விஜய்க்கு ரசிகர் மன்றம் வைத்தவர் என்றும் அவரை குறிப்பிடுகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த இன்பராஜ், ‘‘என் தலைமையில் துப்பாக்கி வைத்தது எனக்குத் தெரியாது; பாதுகாப்பு நிமித்தமாகவே பவுன்சர்கள் இவ்வாறு செய்துள்ளனர்; இதனை சந்தோஷமாகவே எடுத்துக்கொள்கிறேன்,’’ என்று பெருந்தன்மையாக கூறியுள்ளார்.