PMK: ’வரலாற்றிலேயே வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்த முதலமைச்சர் யார் தெரியுமா?’ உடைத்து பேசிய அன்புமணி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Pmk: ’வரலாற்றிலேயே வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்த முதலமைச்சர் யார் தெரியுமா?’ உடைத்து பேசிய அன்புமணி!

PMK: ’வரலாற்றிலேயே வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்த முதலமைச்சர் யார் தெரியுமா?’ உடைத்து பேசிய அன்புமணி!

Kathiravan V HT Tamil
Published Jan 28, 2025 04:56 PM IST

மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு உள் ஒதுக்கீடு தர மனது இல்லை. நானும், ஐயாவும் முதலமைச்சரை தனியாக சென்று பலமுறை சந்தித்தோம். அப்போது ’நான் செய்கிறேன்’ என்று சொல்லி நம்பிக்கை ஊட்டினார். சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டம் கூட்டி நான் தருகிறேன் என்று சொன்னார். ஆனால் அதற்கு பிறகு அவர் அதை செய்யவில்லை.

PMK: ’வரலாற்றிலேயே வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்த முதலமைச்சர் யார் தெரியுமா?’ உடைத்து பேசிய அன்புமணி!
PMK: ’வரலாற்றிலேயே வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்த முதலமைச்சர் யார் தெரியுமா?’ உடைத்து பேசிய அன்புமணி!

மணிமண்டபம் கட்டுவார் உள் ஒதுக்கீடு தரமாட்டார்!

சேலத்தில் நடைபெற்ற பாமக கட்சி நிகழ்ச்சியில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்ட வன்னியர் மக்கள் படித்து வேலைக்கு செல்ல வேண்டும் என்று போராட்டம் நடந்தது. ஆனால் முதலமைச்சர் அவர்கள் மணிமண்டபம் கட்டுவேன், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு தரமாட்டேன் என்று உள்ளார்.

வரலாற்றில் அதிக துரோகம் செய்த முதலமைச்சர்!

 உங்களிடம் எல்லா அதிகாரமும் உள்ளது. ஒரு கையெழுத்து போட்டால் போதும், இதை அவரால் தர முடியவில்லை. தமிழ்நாடு வரலாற்றில் வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்த முதலமைச்சர் யார் என்று சொன்னால் வரலாற்றில் மு.க.ஸ்டாலின் என்றுதான் சொல்வார்கள். 

எம்ஜிஆர் முதல் எடப்பாடி பழனிசாமி வரை!

எம்ஜிஆர் அவர்கள் கூட மருத்துவர் ராமதாஸை சந்திக்க நேரம் கொடுக்கவில்லை. பின்னர் நேரம் கொடுத்து பேசிய பிறகுதான் நிலைமையை எம்ஜிஆர் உணர்ந்தார். வன்னியர்களுக்கு 15 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தயார் செய்து வைத்தார்கள். ஆனால் அதற்குள் எம்ஜிஆர் இறந்துவிட்டார். கலைஞர் வந்த பிறகு அவர் சமுதாயம் உட்பட 107 சமுதாயத்திற்கு எம்.பி.சி என்ற பெயரில் 20 சதவீத இடஒதுக்கீடு கொடுத்தார். அடுத்து வந்த ஜெயலலிதா அவர்கள் நல்லதும் செய்யவில்லை; கெட்டதும் செய்யவில்லை. அடுத்து வந்த எடப்பாடி பழனிசாமி வன்னியர்களுக்கு 10.5% உள் இட ஒதுக்கீடு கொடுத்தார். 

மு.க.ஸ்டாலினுக்கு மனது இல்லை!

ஆனால் அந்த சட்டத்தை ரத்து செய்துவிட்டார்கள். பின்னர் உச்சநீதிமன்றம் தந்த தீர்ப்பில், ‘வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு தரலாம். ஆனால் முறையாக தரவுகள் சேகரித்து தரவேண்டும்’ என்று சொல்லி உள்ளது. ஆனால் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு உள் ஒதுக்கீடு தர மனது இல்லை. நானும், ஐயாவும் முதலமைச்சரை தனியாக சென்று பலமுறை சந்தித்தோம். அப்போது ’நான் செய்கிறேன்’ என்று சொல்லி நம்பிக்கை ஊட்டினார். சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டம் கூட்டி நான் தருகிறேன் என்று சொன்னார். ஆனால் அதற்கு பிறகு அவர் அதை செய்யவில்லை.