’சென்னை, கன்னியாகுமரியில் ஆழ்கடலில் எண்ணெய் எடுக்கும் திட்டம்’ மத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்!
”கடல் வளத்தைக் கெடுக்கும் இந்தத் திட்டத்திற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதுடன், மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்கும் திட்டத்தைக் கைவிடச் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

’சென்னை, கன்னியாகுமரியில் ஆழ்கடலில் எண்ணெய் எடுக்கும் திட்டம்’ மத்திய அரசுக்கு ராமதாஸ் கண்டனம்!
சென்னை, கன்னியாகுமரி அருகில் ஆழ்கடலில் எண்ணெய், எரிவாயு எடுக்க அளித்த அனுமதியை உடனடியாக மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என பா.ம.க. நிறுவனர் - தலைவர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
மத்திய அரசுக்கு கண்டனம்
தமிழ்நாட்டில் கன்னியாகுமரியை அடுத்த ஆழ்கடல் பகுதியில் 3 இடங்களிலும், சென்னைக்கு அருகே ஓரிடத்திலும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஆழ்கடல் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் திட்டங்களால் கடல் வளம் பாதிக்கப்படுவதுடன், சுற்றுச்சூழலும் சீர்கெடும் என்று வல்லுனர்கள் எச்சரித்து வரும் நிலையில், அதை மீறி அனுமதி அளிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.