Ramadoss vs Anbumani: 'என்னை யாரும் சந்திக்க வர வேண்டாம்’ பாமக தலைவர் ராமதாஸ் அறிவிப்பு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ramadoss Vs Anbumani: 'என்னை யாரும் சந்திக்க வர வேண்டாம்’ பாமக தலைவர் ராமதாஸ் அறிவிப்பு!

Ramadoss vs Anbumani: 'என்னை யாரும் சந்திக்க வர வேண்டாம்’ பாமக தலைவர் ராமதாஸ் அறிவிப்பு!

Kathiravan V HT Tamil
Published Apr 12, 2025 11:46 AM IST

இந்நிலையில், இன்று (12.4.2025) காலை முதல், "யாரும் என்னை சந்திக்க வர வேண்டாம்" என ராமதாஸ் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், தைலாபுர தோட்டத்திற்கு இன்று காலை முதல் கட்சி நிர்வாகிகள் யாரும் செல்லவில்லை.

Ramadoss vs Anbumani: 'என்னை யாரும் சந்திக்க வர வேண்டாம்’ பாமக தலைவர் ராமதாஸ் அறிவிப்பு!
Ramadoss vs Anbumani: 'என்னை யாரும் சந்திக்க வர வேண்டாம்’ பாமக தலைவர் ராமதாஸ் அறிவிப்பு!

ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கட்சியின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணி ராமதாஸை நீக்கி, தானே தலைவராகப் பொறுப்பேற்பதாக நேற்று அறிவித்தது கட்சி வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக நேற்றிரவு தனது மகள்களிடமும் மருத்துவர் ராமதாஸ் ஆலோசனையில் ஈடுபட்டதாக ஊடங்களில் செய்திகள் வெளியானது. 

ராமதாஸை சந்தித்த ஜி.கே.மணி 

இந்நிலையில், திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனரும், தற்போதைய தலைவருமான டாக்டர் ராமதாஸை சந்திக்க அக்கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி வருகை தந்தார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்த அன்புமணியை நீக்கிவிட்டு, மீண்டும் தானே அந்தப் பொறுப்பை ஏற்பதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து, அன்புமணியின் ஆதரவாளர்கள் மத்தியிலும் குழப்பமும் அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது.

சந்திக்க மறுக்கும் ராமதாஸ் 

இந்த முடிவை அடுத்து, கட்சியின் முக்கிய நிர்வாகிகளான கௌரவ தலைவர் ஜி.கே. மணி, வழக்கறிஞர் பாலு, திலகபாமா, பொருளாளர் உள்ளிட்டோர், கடந்த இரண்டு நாட்களாக தைலாபுரத்தில் உள்ள ராமதாஸின் தோட்டத்திற்கு சென்று அவரைச் சந்தித்து சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும், சிலரை மட்டுமே ராமதாஸ் சந்தித்ததாகவும், மற்றவர்களை சந்திக்க மறுத்ததாகவும் தகவல்கள் வெளியானது. 

இந்நிலையில், இன்று (12.4.2025) காலை முதல், "யாரும் என்னை சந்திக்க வர வேண்டாம்" என ராமதாஸ் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், தைலாபுர தோட்டத்திற்கு இன்று காலை முதல் கட்சி நிர்வாகிகள் யாரும் செல்லவில்லை. ராமதாஸின் இந்த உத்தரவை கட்சியினர் பின்பற்றுவார்களா என்பது தெளிவாகவில்லை. மேலும், ஜி.கே. மணி உள்ளிட்டோர் அன்புமணியை சந்தித்து ஆலோசனை நடத்தி வந்த நிலையில், ராமதாஸின் இந்த புதிய அறிவிப்பு கட்சிக்குள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாமகவின் இந்த உட்கட்சி மாற்றங்கள் தமிழக அரசியலில் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளன.

Kathiravan V

TwittereMail
காஞ்சி கதிரவன், 2016ஆம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் உள்ளார். இயந்திரவியல் பட்டயப்படிப்பு, இளங்கலை அரசியல் அறிவியல், முதுகலை வணிக மேலாண்மை படித்து உள்ளார். தொலைக்காட்சி, டிஜிட்டல் ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அரசியல், நாட்டு நடப்பு, தொழில்முனைவு, வரலாறு, ஆன்மீகம் சார்ந்த செய்திகளில் பங்களித்து வருகிறார். அபுனைவு நூல்கள் வாசிப்பும், உரைகள் கேட்டலும், உரையாடல்களும் இவரது பொழுதுபோக்கு.
Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.