தமிழ்நாடு ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்.. அதிகம் தேர்ச்சி பெற்ற முதல் 5 மாவட்டங்கள் எது தெரியுமா? - விபரம் இதோ!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தமிழ்நாடு ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்.. அதிகம் தேர்ச்சி பெற்ற முதல் 5 மாவட்டங்கள் எது தெரியுமா? - விபரம் இதோ!

தமிழ்நாடு ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்.. அதிகம் தேர்ச்சி பெற்ற முதல் 5 மாவட்டங்கள் எது தெரியுமா? - விபரம் இதோ!

Karthikeyan S HT Tamil
Published May 08, 2025 10:47 AM IST

ப்ளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை இன்று (மே 8) காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். அதில், மொத்தம் 95.03% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்.. அதிகம் தேர்ச்சி பெற்ற முதல் 5 மாவட்டங்கள் எது தெரியுமா?
தமிழ்நாடு ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்.. அதிகம் தேர்ச்சி பெற்ற முதல் 5 மாவட்டங்கள் எது தெரியுமா?

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் இந்தாண்டு தேர்ச்சி சதவிகிதம் 95.03% ஆக உள்ளது. மொத்தம் 7,92,494 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 7,53,142 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தாண்டும் மாணவர்களைவிட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அதிகம் தேர்ச்சி பெற்ற முதல் 5 மாவட்டங்கள்

  • அரியலூர் - 98.82%
  • ஈரோடு - 97.98%
  • திருப்பூர் - 97.53%
  • கோயம்புத்தூர் - 97.48%
  • கன்னியாகுமரி - 97.01%

மேலும் படிக்க | ப்ளஸ் 2 தேர்வு முடிவு பயம்.. தற்கொலை செய்துகொண்ட மாணவி அதிக மதிப்பெண் பெற்று வெற்றி!

அரசுப் பள்ளி மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெற்ற முதல் 5 மாவட்டங்கள்

  • அரியலூர் - 98.32%
  • ஈரோடு - 96.88%
  • திருப்பூர் - 95.64
  • கன்னியாகுமரி - 95.06%
  • கடலூர் - 94.99%

மேலும் படிக்க | தமிழ்நாடு ப்ளஸ் 2 பொதுத் தேர்வு ரிசல்ட்: மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி விகிதம் பற்றிய கூடுதல் விபரம் இதோ!

பள்ளிகள் வகைபாடு வாரியான தேர்ச்சி சதவிகிதம்

  • இருபாலர் பள்ளிகள் – 95.30%
  • பெண்கள் பள்ளிகள் – 96.50%
  • ஆண்கள் பள்ளிகள் – 90.14%

பள்ளிகள் மேலாண்மை வாரியான தேர்ச்சி சதவிகிதம்

  • அரசுப் பள்ளிகள் – 91.94%
  • அரசு உதவி பெறும் பள்ளிகள்- 95.71%
  • தனியார் சுயநிதிப் பள்ளிகள்- 98.88%

மேலும் படிக்க | தமிழக பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது.. ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி? - முழு விவரம்!

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 3 முதல் மார்ச் 25 வரை நடைபெற்றது. இத்தேர்வை மொத்தம் 8,02,568 மாணவர்கள் எழுதினர். இதில் 18,344 தனித்தேர்வர்கள் மற்றும் 145 சிறைவாசிகளும் அடங்குவர். தேர்வு மொத்தம் 3,316 மையங்களில் நடத்தப்பட்டது. 7,518 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் இதில் பங்கேற்றனர். முதல் நாள் தமிழ் தேர்வில் 11,430 மாணவர்கள் பங்கேற்கவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தேர்வு காலை 10:00 மணி முதல் பிற்பகல் 1:15 மணி வரை நடைபெற்றது. விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் தொடங்கின. அந்த பணிகளும் நிறைவு பெற்று மதிப்பெண்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளும் முடிந்துவிட்ட நிலையில், பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன.