தமிழ்நாடு ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்.. அதிகம் தேர்ச்சி பெற்ற முதல் 5 மாவட்டங்கள் எது தெரியுமா? - விபரம் இதோ!
ப்ளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை இன்று (மே 8) காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். அதில், மொத்தம் 95.03% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள்.. அதிகம் தேர்ச்சி பெற்ற முதல் 5 மாவட்டங்கள் எது தெரியுமா?
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 08) வெளியானது. தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார். தேர்வு முடிவுகளை, results.digilocker.gov.in, tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணைய தளங்கள் மூலம் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
12ம் வகுப்பு பொதுத் தேர்வில் இந்தாண்டு தேர்ச்சி சதவிகிதம் 95.03% ஆக உள்ளது. மொத்தம் 7,92,494 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 7,53,142 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தாண்டும் மாணவர்களைவிட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதிகம் தேர்ச்சி பெற்ற முதல் 5 மாவட்டங்கள்
- அரியலூர் - 98.82%
- ஈரோடு - 97.98%
- திருப்பூர் - 97.53%
- கோயம்புத்தூர் - 97.48%
- கன்னியாகுமரி - 97.01%
மேலும் படிக்க | ப்ளஸ் 2 தேர்வு முடிவு பயம்.. தற்கொலை செய்துகொண்ட மாணவி அதிக மதிப்பெண் பெற்று வெற்றி!