தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Petrol Bomb Hurled At The House Of An Rss Member In Madurai

Petrol bombing in Madurai: ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு!

Suriyakumar Jayabalan HT Tamil
Sep 24, 2022 11:14 PM IST

மதுரை மாவட்டத்தில் வசிக்கும் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் அடையாளம் தெரியாத நபர் பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ளார்.

பெட்ரோல் குண்டு வீச்சு
பெட்ரோல் குண்டு வீச்சு

ட்ரெண்டிங் செய்திகள்

இந்நிலையில் கிருஷ்ணன் வீட்டிற்கு முன்பு வேகமாக வந்த நபர் ஒருவர் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளார். இதன் காரணமாக அவரது வீடு தீப்பற்றி எரிந்துள்ளது. பின்னர் பெட்ரோல் குண்டு வீசிய நபர் அவரை இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்த நபருடன் ஏறித் தப்பிச் சென்றுள்ளார்.

ஈரோடு, கோயம்புத்தூர் மாவட்டத்தைத் தொடர்ந்து தற்போது மதுரையிலும் இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதுகுறித்து காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், இதுபோன்று பாஜக நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்துவோரைத் தடுத்து நிறுத்த வேண்டும் என பாஜக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்