'ரேஷன் கடையில் கருவிழி மூலமாக பொருள்கள் வாங்குவது கடினமாக இருந்தது.. சில பேருக்கு அது வேலை செய்யவில்லை’: புலம்பிய மக்கள்
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  'ரேஷன் கடையில் கருவிழி மூலமாக பொருள்கள் வாங்குவது கடினமாக இருந்தது.. சில பேருக்கு அது வேலை செய்யவில்லை’: புலம்பிய மக்கள்

'ரேஷன் கடையில் கருவிழி மூலமாக பொருள்கள் வாங்குவது கடினமாக இருந்தது.. சில பேருக்கு அது வேலை செய்யவில்லை’: புலம்பிய மக்கள்

Marimuthu M HT Tamil Published Jun 11, 2025 05:40 PM IST
Marimuthu M HT Tamil
Published Jun 11, 2025 05:40 PM IST

பயோமெட்ரிக் மூலமாக நாங்கள் பொருட்களை ஈஸியாக வாங்கிடுவோம் என்றும்; இந்த கருவிழி முறை கஷ்டமாகத் தான் இருக்கு என்றும் ரேஷன் கடைகளில் அமலான புதிய முறையால் பொதுமக்கள் வேதனைத் தெரிவித்தனர்.

'ரேஷன் கடையில் கருவிழி மூலமாக பொருள்கள் வாங்குவது கடினமாக இருந்தது.. சில பேருக்கு அது வேலை செய்யவில்லை’: புலம்பிய மக்கள்
'ரேஷன் கடையில் கருவிழி மூலமாக பொருள்கள் வாங்குவது கடினமாக இருந்தது.. சில பேருக்கு அது வேலை செய்யவில்லை’: புலம்பிய மக்கள்

நியாய விலைக்கடையில் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வந்தன. இந்நிலையில், கருவிழி மூலம் மட்டுமே, இனி பதிவுசெய்யப்பட்டு, பொருட்கள் வழங்கப்படும் என நியாயவிலைக்கடையில் புதிய உத்தரவு வெளியானது. ஆனால், நடைமுறையில் இந்த உத்தரவைப் பின்பற்றுவதில் சிக்கல் இருந்தது.

இதுதொடர்பாக, மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தலைவி கூறுகையில், ‘’ நாங்க ரேஷன் வாங்குவதற்காக கடைக்கு வந்திருந்தோம். ரேஷன் கடையில் பொருட்கள் எல்லாம் நாங்கள் பயோமெட்ரிக் முறையில் வாங்கி கொண்டு இருந்தோம். இன்றைக்கு ரொம்ப கூட்டமாக இருக்கு.

எதனால் என்றால், கருவிழி பதிவு மூலமாக பொருட்கள் வாங்கணும் என்பதால் நீண்டநேரம் நிற்கவேண்டியிருக்கு. வயதானவங்களுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படுது.

இதை அரசுகிட்ட கொண்டு போகணும். எங்களுக்கு பயோமெட்ரிக் தான் ஈஸியாக இருக்கு. இந்த கருவிழி மூலமாக ரேஷன் பொருட்கள் வாங்கிறது ரொம்பக் கஷ்டமாக இருக்கு. சில பேருக்கு கருவிழிப் பதிவு வேலை செய்யவில்லை. நீண்டநேரமாக நிற்கவேண்டியதாக இருக்கு.

’மீண்டும் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வாங்கினால் நன்று’:

அதனால், மீண்டும் பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வாங்கினால் நல்லாயிருக்கும்ன்னு நினைக்கிறேன். சில பேருக்கு கருவிழி மூலம் பதிவு நடக்குது. சில பேருக்கு கருவிழி மூலம் பதிவு நடக்கமாட்டியுது. இதனால், பொருட்கள் வாங்கத் தாமதம் ஆகுது.

பயோமெட்ரிக் மூலமாக நாங்கள் பொருட்களை ஈஸியாக வாங்கிடுவோம். இந்த கருவிழி முறை கஷ்டமாகத் தான் இருக்கு’’ என்றார்.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்காத கருவிழிப் பதிவு:

இதேபோல், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கருவிழிப் பதிவு சரியாகப் பதியாததால், நியாய விலைக்கடையில் இருக்கும் பொருட்களை வாங்கமுடியவில்லை என மக்கள் புலம்பினர். குறிப்பாக, தேனி, சிவகங்கை, திண்டுக்கல், அரியலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பெரும்பாலான மக்கள் கருவிழி மூலம் பதிந்து, நியாய விலைக்கடையில் பொருட்கள் வாங்க முடியாமல் தவித்தனர்.

கருவிழி மூலம் பதிவு, ரேஷன் கடை, ரேஷன் கடையில் பொருட்கள் வாங்காத மக்கள், பயோமெட்ரிக் முறை, நியாயவிலைக்கடை