கோவை விவசாயிகளுக்கு அபராதமா? சட்டமன்றத்தில் சூடான விவாதத்தை கிளப்பிய அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  கோவை விவசாயிகளுக்கு அபராதமா? சட்டமன்றத்தில் சூடான விவாதத்தை கிளப்பிய அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி!

கோவை விவசாயிகளுக்கு அபராதமா? சட்டமன்றத்தில் சூடான விவாதத்தை கிளப்பிய அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி!

Stalin Navaneethakrishnan HT Tamil
Published Apr 25, 2025 11:16 AM IST

மணல் கடத்தல்காரர்களுக்கு அபராதம் விதிக்காமல், விவசாயிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், எஸ்.பி.வேலுமணி சட்டமன்றத்தில் பேசினார்.

கோவை விவசாயிகளுக்கு அபராதமா? சட்டமன்றத்தில் சூடான விவாதத்தை கிளப்பிய அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி!
கோவை விவசாயிகளுக்கு அபராதமா? சட்டமன்றத்தில் சூடான விவாதத்தை கிளப்பிய அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி!

பட்டா நிலம் மற்றும் அரசு நிலங்களில் அனுமதியின்றி மண் எடுப்பதை கண்டறிய, சிறப்பு தனிக்குழுக்கு நியமனம் செய்ய உத்தரவிட்டது என்றும், சிறப்பு தனிக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில், கோவை புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தின் சார்பாக, மேற்கண்ட குற்றச் செயலுக்காக தமிழ்நாடு சிறுகனிம விதிகள் 1999ல் விதி 36ன் படி, மணல் கடத்தல்காரர்களுக்கு அபராதம் விதிக்காமல், விவசாயிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், எஸ்.பி.வேலுமணி சட்டமன்றத்தில் பேசினார்.

அதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கோவையில 16 வழித்தடங்களில் இயங்கும் செங்கல் சூளைகளை மூடக்கோரி தொடரப்பட்ட வழக்கில், அரசின் அனுமதியில்லாமல் மணல் எடுப்பவர்களின் விபரங்களை நீதிமன்றம் கேட்டதாகவும், அது தொடர்பான விசாரணையில் கோவை போரூர், இக்கறை, ஆலந்தூர், வெள்ளிமலை பகுதியில் உள்ள அரசு நிலங்களில் அதிக அளவில் 5 மீட்டர் வரை மணல் அள்ளப்பட்டிருந்ததாகவும், செங்கல் சூளைகளுக்கு அதிக அளவில் மணல் வெட்டப்பட்டிருந்ததாகவும்,

அந்த அடிப்படையில் நீதிமன்றத்தின் உத்தரவிட் பேரில் கனிமவளத்துறை நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், அரசு நிலத்தில் கள்ளத்தனமாக மணல் எடுத்தவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுத்திருப்பதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி எழுப்பிய இந்த விவாதத்தால், சட்டமன்றத்தின் இன்றைய துவக்க நாளே, சூடாக காணப்பட்டது.

Stalin Navaneethakrishnan

TwittereMail
பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன், இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் எடிட்டராக பணியாற்றி வருகிறார். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகத்தில் 23 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், தேசம், சர்வதேசம், பொழுதுபோக்கு, ஜோதிடம், ஆன்மிகம், விளையாட்டு, வியாபாரம், லைப்ஸ்டைல் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் கீழ் செய்திகளை எழுதுவதுடன், இணையதளத்தையும் வழிநடத்தி வருகிறார். மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் பிபிஏ முடித்துள்ள இவர், தினபூமி, தினமலர், நியூஸ் 18, ஏபிபி நாடு ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து, 2022 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
Whats_app_banner
மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.