‘மாட்டிக்கினாரு ஒர்த்தரு.. இவர காப்பாத்தனும்..’ போக்சோ தலைமறைவு மதபோதகர் கைது!
ஆய்வாளர் அர்ஜீன் தலைமையிலான தனிப்படையினர் ஜான் ஜெபராஜை மூணாறு பகுதியில் பதுங்கி இருந்த போது நேற்று கைது செய்தனர். அவரை கோவை காந்திபுரம் மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர்.

கோவையில் சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த மத போதகர் னாஜன் ஜெபராஜ் கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம் சாம்பார் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் மத போதகர் ஜான் ஜெபராஜ் (வயது 35). இவர் கோவை ஜி. என். மில்ஸ தற்போது வசித்து வருகிறார். மேலும் கோவையில் மத போதகராகவும் கிறிஸ்தவ பாடல்களை பாடி பிரசங்கம் செய்து பிரபலமாகவும் இருந்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த வருடம் மே மாதம் 21 ஆம் தேதி அவரது வீட்டில் நடந்த கிறிஸ்தவ நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற 2 சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்ததாக ஜான் ஜெபராஜ் மீது அந்த சிறுமிகள் காந்திபுரம் மத்திய மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அதைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி மற்றும் போலீசார் ஜான் ஜெபராஜ் மீது போஸ்கோ பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கு இடையே பாதிரியார் ஜான் ஜெபராஜ் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் 3 பணிப்படைகள் அமைத்து உத்தரவிட்டார்.
தனிப்படை போலீசார் ஜான் ஜெபராஜ் நெல்லை, தென்காசி, கன்னியாகும, பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் தேடி வந்தனர். அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் தடுக்க இருக்க விமான நிலையங்கள், துறைமுகங்களுக்கு லுக் அவுட் நோட்டிஸ் வழங்கப்பட்டது. இதற்கு இடையே ஜான் ஜெபராஜ் முன்ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்தார். அவரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் ஆய்வாளர் அர்ஜீன் தலைமையிலான தனிப்படையினர் ஜான் ஜெபராஜை மூணாறு பகுதியில் பதுங்கி இருந்த போது நேற்று கைது செய்தனர். அவரை கோவை காந்திபுரம் மத்திய அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். பின்னர், போக்சோ நீதிமன்றத்திற்கு உதவி ஆணையர் கணேஷ் தலைமையில் பலத்த பாதுகாப்போடு அழைத்து வந்தனர்.
இந்த சம்பவம் போல, வேறு ஏதாவது சம்பவங்களில் இவர் ஈடுபட்டாரா என்பது குறித்து போலீஸ் விசாரணை நடத்த உள்ளனர்.

டாபிக்ஸ்